- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
கவிஞன் நான் ஓர்
கவிதை கண்டேன்!
கண்மணி அக்கவிதையின்
ரசிகன் ஆனேன்!
பெண் மயில் அவளின்
தலைவன் ஆனேன்!
காலம் தந்த பரிசில்
மகிழ்ந்து போனேன்!
சித்திரம் போல் ஒரு
இனிமை!
சிரிப்பதில் கொண்டாள்
தனித்தன்மை!

ஆகாய வானில் பல
நட்சத்திரம்!
என் இல்லற வானில்
இவளே ஒரே காவியம்!
கடவுளைக் காணாத
எனக்கு
இவளே என் மனதின்
கிழக்கு!
நான் பண்ணிய புண்ணியம்
எதுவோ?
அதன் பலன்தான் இவள் என்
துணையோ?
இந்த இராமனின் ஜானகி
இவளோ!
அந்த தசரதன் தலைமகன்
நானோ!
என் வாழ்க்கைக் கடலின்
மாலுமி ஆனாள்!
கரை சேரும் என் கப்பலும்
ஓர் நாள்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}