சென்னை: கல்கி படம் பார்த்தேன். என்ன ஒரு காவியம். இந்திய சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின் என்று கல்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
பாகுபலி புகழ் பான் இந்தியா ஸ்டார் ஆன பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் கடந்த 27ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஷோபனா, தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிருணாள் தாக்கூர், அன்னா பென், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட நட்சத்திங்கள் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். அவர் தான் இரண்டாம் பாகத்துக்கான அடித்தளமாக உள்ளார். 2வது பாகத்தில்தான் அவரது நடிப்பு புயல் காத்திருப்பதாக தெரிகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் 2 நாட்களில் மட்டும் ரூ.275 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. மகாபாரத கதையை அறிவியல் தொழில்நுட்பத்துடன், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு கற்பனைகளைக் கலந்து அசாத்திய கற்பனையால் உருவாக்கி ரசிகர்களை மிரட்டலான அனுபவத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
பைரவர் என்ற ஒரு வேட்டைக்காரரின் கதையைச் சொல்கிறது. இது ரசிகர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை எனலாம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தை பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "கல்கியைப் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குநர் நாக் அஸ்வின், இந்திய சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு சென்று உள்ளார். என் அன்பு நண்பர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அஸ்வினி தத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் கல்கி குழுவுக்கு வாழ்த்துக்கள். கல்கி 2898 ஏடி இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}