ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் கொண்ட பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து, அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். பின்னர் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த ஜனவரி 10 ஆம் முதல் தேதி 17ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பிறகு வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில்,வேட்பாளர் பெயர் மாற்றும் சின்னங்களின் விவரம் பின்வருமாறு:-
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி வேட்பாளர்கள்
சந்திரகுமார் (திமுக) - உதயசூரியன்
சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) -ஒலிவாங்கி (மைக்)
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி
சவுந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) -மிதிவண்டி
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள்
முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) -மின்கல விளக்கு
ஆனந்த் சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) -மின் கம்பம்
கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) ஆட்டோ ரிக்ஷா
சவிக்கா (சமானிய மக்கள் நலக்கட்சி) -மோதிரம்
செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) -ஷூ
தர்மலிங்கம் (இந்திய ஜன சங்கம் கட்சி) வெண்டைக்காய்
பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -பலாப்பழம்
மதுரை விநாயகம் (வீரோ கி விர் இந்தியன் கட்சி) -தலைக்கவசம்
முத்தையா (தாக்கம் கட்சி) - தீப்பெட்டி
முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) -வளையல்கள்
சுயேச்சை வேட்பாளர்கள்
அக்னி ஆழ்வார் -ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை
அமுதரசு -தென்னந்தோப்பு
ஆனந்த் -கப்பல்
இசக்கிமுத்து நாடார் -சீர்வரிசை பொருட்கள்
ரவி -அலமாரி
ராமசாமி -பேனா தாங்கி
கலையரசன் -பிரஷர் குக்கர்
கார்த்தி-நடைவண்டி
கிருஷ்ணமூர்த்தி-பலூன்
கோபாலகிருஷ்ணன்- மட்டை பந்தடி வீரர்
சங்கர்குமார்-மணிஆரம்
சத்யா-வார்ப்பட்டை
சாமிநாதன்- கியாஸ் சிலிண்டர்
சுப்பிரமணியன் -பென்ஞ்
செங்குட்டுவன் சாலை உருளை
செல்லக்குமாரசாமி -மிதிவண்டி காற்றடிக்கும் குழாய்
தனஞ்ஜெயன் - பைனாகுலர்
திருமலை- பரிசு பெட்டகம்
நூர் முகமது-பிஸ்கெட்
பஞ்சாட்சரம்-கிரிக்கெட் மட்டை
பத்மராஜன்-டயர்கள்
பரமசிவம்-கரும்பலகை
பரமேஸ்வரன்-படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு
பவுல்ராஜ்-வைரம்
பாண்டியன்-பெட்டி
மதுமதி-ரொட்டி
முகமது கைபீர்-ரொட்டி சுடும் கருவி
முருகன்-செங்கல்
ராஜசேகரன்-கைப்பெட்டி
ராஜமாணிக்கம்-புருசு (பிரஷ்)
லோகநாதன்-வாளி
லோகேஷ் சேகர்-கேக் வெண்ணிலா-கணக்கீட்டுப்பொறி (கால்குலேட்டர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
{{comments.comment}}