ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!

Feb 21, 2023,09:05 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா ராஜனும் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அவர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தென்னரசு களம் கண்டுள்ளார். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவையும் போட்டியில் உள்ளன.



இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக  களம் இறங்கியுள்ளன. அமைச்சர்கள் ஷிப்ட் போடாத குறையாக தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டை வேட்டையாடி வருகின்றனர். அதேபோல கூட்டணிக் கட்சிகளின் பிற தலைவர்களும் மாறி மாறி பிரசாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை  மேயர் பிரியா ராஜனும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்த அவர் கருங்கல்பாளையம் பகுதியில் வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்தார்.  கையில் பிட் நோட்டீஸை ஏந்தியபடி வந்த அவர் பெண்கள், ஆண்களிடம் நோட்டீஸைக் கொடுத்து அம்மா, அக்கா, அண்ணா மறக்காமல் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று கேட்டுக் கொண்டார்.

பலரும் பிரியாவைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். நீங்கதான் சென்னை மேயரா.. சின்னப் பொண்ணா இருக்கீங்களே என்று கேட்டு வாழ்த்தும் தெரிவித்தனர். அதைக் கேட்டு வெட்கப் புன்னகை சிந்தியவாறு ஓட்டு கேட்டார் பிரியா.  ஒரு வீட்டில் ஓட்டு கேட்டுப் போனபோது அந்த வீட்டுப் பெண் தனது குழந்தையுடன் நின்றிருந்தார். அதைப் பார்த்த பிரியா, குழந்தையின் கன்னத்தைக் கொஞ்சி அவரிடம் பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்