ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!

Feb 21, 2023,09:05 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா ராஜனும் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அவர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தென்னரசு களம் கண்டுள்ளார். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவையும் போட்டியில் உள்ளன.



இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக  களம் இறங்கியுள்ளன. அமைச்சர்கள் ஷிப்ட் போடாத குறையாக தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டை வேட்டையாடி வருகின்றனர். அதேபோல கூட்டணிக் கட்சிகளின் பிற தலைவர்களும் மாறி மாறி பிரசாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை  மேயர் பிரியா ராஜனும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்த அவர் கருங்கல்பாளையம் பகுதியில் வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்தார்.  கையில் பிட் நோட்டீஸை ஏந்தியபடி வந்த அவர் பெண்கள், ஆண்களிடம் நோட்டீஸைக் கொடுத்து அம்மா, அக்கா, அண்ணா மறக்காமல் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று கேட்டுக் கொண்டார்.

பலரும் பிரியாவைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். நீங்கதான் சென்னை மேயரா.. சின்னப் பொண்ணா இருக்கீங்களே என்று கேட்டு வாழ்த்தும் தெரிவித்தனர். அதைக் கேட்டு வெட்கப் புன்னகை சிந்தியவாறு ஓட்டு கேட்டார் பிரியா.  ஒரு வீட்டில் ஓட்டு கேட்டுப் போனபோது அந்த வீட்டுப் பெண் தனது குழந்தையுடன் நின்றிருந்தார். அதைப் பார்த்த பிரியா, குழந்தையின் கன்னத்தைக் கொஞ்சி அவரிடம் பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்