ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

Jan 14, 2025,10:43 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஆசிரியை சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முக்கியக் கட்சியாக இதுவரை திமுக மட்டுமே தனது வேட்பாளரை (வி.சி.சந்திரகுமார்) அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன.


இந்த நிலையில் 2வது பெரிய கட்சியாக தற்போது நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. ஆசிரியை சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.




ஆசிரியை சீதாலட்சுமி தேர்தலில் போட்டியிடுவது இது 2வது முறையாகும். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.  திருப்பூர் தேர்தலில் சீதாலட்சுமி 95726 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றார். பாஜகவுக்கு அடுத்த இடம் சீதாலட்சுமிக்குக் கிடைத்தது. 

 

இந்த நிலையில் மீண்டும் சீதாலட்சுமிக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு வேட்பாளராக சீதாலட்சுமியை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி கட்த 2013ம் ஆண்டு வரை ஆசிரியையாகப் பணியாற்றியவர் ஆவார். தற்போது முழு நேர அரசியலில் இருக்கும் இவரது கணவர் பொறியாளர் ஆவார். கோபிச்செட்டிப் பாளையத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர், கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையம் ஆகும்.


விக்கிரவாண்டி தேர்தல் பாணியில் மீண்டும் வாய்ப்பு




விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அபிநயா என்பவர் போட்டியிட்டார். இவர் அதற்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து வந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அபிநயாவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருந்தார் சீமான்.


தற்போது இதே பாணியில் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் தோல்வியைடந்த சீதாலட்சுமிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். கோமதி போட்டியிட்டார். அவருக்கு வெறும் 11 ஆயிரத்து 629 வாக்குகளே கிடைத்தன. 3வது இடத்தைப் பிடித்தார் கோமதி. அடுத்து 2023ல் நடந்த இடைத் தேர்தலில் மேனகா நவநீதன் போட்டியிட்டு 10 ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்து டெபாசிட்டைப் பறி கொடுத்திருந்தார்.


தற்போது திமுக மட்டுமே முக்கியக் கட்சியாக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே மறு முனையில் முக்கியக் கட்சியாக  களம் காணவுள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளை இக்கட்சி பெற்றாலே அதுவே பெரிய வெற்றியாகும். மேலும் பாஜக, அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. திமுகவுக்கு நெருக்கடி தர, நாம் தமிழர் கட்சிக்கு இக்கட்சியினர் வாக்களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் இப்படித்தான் விக்கிரவாண்டியில் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக அதிரடியாக அதிமுக வாக்குகளையும் சேர்த்து அள்ளியது நினைவிருக்கலாம். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்