இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

Feb 19, 2026,06:02 PM IST

சென்னை:  இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என சட்டபேரவையில்  அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி  மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ர%.5,000 வரவு வைக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனையடுத்து தமிழக மகளிருக்கு ஸ்டாலின் தந்த உறுதிமொழி தான் உரிமைத் தொகை. தேர்தலை காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்க்கின்றனர். வாக்குறுதி முந்திக் கொண்டது திமுக அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு முன் பணமாக 3,000 ரூபாய், கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2000 என 5,000 ரூபாய் மகளிர் உரிமைத்திட்டன் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.




இதற்கு பல்வேறு கட்சியினர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பயத்தில் இரவோடு இரவாக 5,000 ரூபாயை திமுக அரசு விடுவித்துள்ளது. இதற்கு கற்பனைக் காரணங்களை வேறு திமுக அரசு கூறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தான் கோடை காலம் வருகிறதா என்று  இன்று நடைபெற்ற சட்டசபையில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்