ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு.. காங்கிரஸ், பாஜக, விசிக, தமாகா, பாமக தலைவர்கள் இரங்கல்

Dec 14, 2024,05:34 PM IST

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் 75 இன்று காலமானார். அவருக்கு வயது 75. ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவன் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 




தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று நுரையீரலில் சளி அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இளங்கோவன் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 


ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது மறைவிற்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை


தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் மறைவிற்கு, காங்கிரஸ் கமிட்டி கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரழிப்பு. தனிப்பட்ட முறையில் அவரது மறைவு தனக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.


பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்


இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை எனது சிறு வயதிலிருந்தே எனக்குத் தெரியும். என்னை ஒருமையில்தான் உரிமையோடு அழைப்பார். அப்பா கட்சியில் சேராமல் பாஜகவில் சேர்ந்தது ஏன் என்று கூட என்னிடம் உரிமையோடு கேட்டவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.


வி.சி.க தலைவர் திருமாவளவன் இரங்கல்


இது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமானஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 


மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளில் இணைய அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்து இருந்த வேலை அவரது மறைவு செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.


ப.சிதம்பரம்


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகத் துயரம் அடைந்தேன். இளங்கோவன் அவர்கள் கட்சித் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரபரப்பாகக் கட்சிப் பணியாற்றியவர். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்த காலங்களில் உறுதியாக நின்றவர்.


அவர் நல்ல பேச்சாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவு. அவருடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் மனப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்