சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடந்து விட்டன. முதலில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையை முழுமையாக படிக்காமல் அமர்ந்து விட்டார். அடுத்து சபாநாயகர் பேசினார். அவர் பேசி முடித்த பிறகு ஆளுநர் புறக்கணிப்பு குறித்து குறிப்பிட்டார். இதையடுத்து தேசிய கீதம் கூட பாடப்படாத நிலையில் ஆளுநர் வெளிநடப்புச் செய்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டசபைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைக்கு ஆளுநர் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கும். காரணம் தேர்தலுக்குப் பின்னர் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் எங்கும் எப்போதும் கடைசியில்தான் நாட்டுப் பண் இசைக்கப்படும். இந்த மரபு கூட தெரியாமல் கவர்னர் இருக்கிறார் என்றால் அது அவரது அறியாமை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் வராமலேயே இருந்திருக்கலாம் என்றார் இளங்கோவன்.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}