தொடர்ந்து தலைவலி.. திடீரென மரணம்.. 30 வயது டிக்டாக் ஸ்டாருக்கு நேர்ந்த பரிதாபம்!

Mar 22, 2023,11:22 AM IST

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதேயான இளம் பெண் டிக்டாக் பிரபலம்  திடீர் மரணத்தை சந்தித்திருப்பது அதிர வைத்துள்ளது. 


அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது பெயர் ஜெஹேன் தாமஸ்.  இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக்கிலும் பிரபலமாக வலம் வந்தார். அவருக்கு ஆப்டிக் நியூரிட்டிஸ் என்ற நரம்பியல் பிரச்சினை இருந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவும் போட்டிருந்தார்.  இதனால் கண்கள் வீங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். கண்ணில் உள்ள பார்வை நரம்பு வீங்கியதால் இந்த கண் வீக்கம்.


இந்த நிலையில் அவர் தற்போது மரணமடைந்து விட்டார். தொடர் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவர் நரம்பியல் பிரச்சினை முற்றி மரணத்தைத் தழுவியுள்ளார்.  டிக்டாக்கில் 72,000 பாலோயர்கள் இவருக்கு உள்ளனர். 


முதலில் அவருக்கு மன அழுத்தம் காரணமாக தலைவலி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில்தான் அவருக்கு நியூரிட்டிஸ் நரம்பியல் கோளாறு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அவதிக்குள்ளாகியிருந்தார். தன்னால் தலைவலியை தாங்கவே முடியவில்லை என்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு போட்டிருந்தார்.


ஜெஹேன் தாமஸுக்கு 2 மகன்கள் உள்ளனர். தாயை இழந்த இரு குழந்தைகளும் பெரும் சோகத்தில் உள்ளனராம்.


தலைவலி தொடர்ந்து இருந்தால் உரிய மருத்துவரை அணுகி உரிய பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். சாதாரண தலைவலிதானே என்று இருந்து விடாதீர்கள்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்