சென்னை : சர்வதேச திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கிடா படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியிடப்பட உள்ளது.
அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில் உருவான படம் தான் கிடா. திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், கைத்தட்டல்களையும் குவித்து வருகிறது.இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கிடா திரைப்படம் பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஆட்டுக்கும் உள்ள உறவையும் பாசத்தையும் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை, தீபாவளி திருநாளில் நடக்கும் நிகழ்வை குறிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் பல பாராட்டுக்களை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கிறது தமிழ் சினிமா. அதிலிருந்து மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வாழ்வியல் யதார்த்தங்களை இப்படம் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதை இப்படத்தின் டிரெய்லர் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}