உங்களை பார்க்க நானே வருகிறேன்...லாரன்ஸ் அசத்தல் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Feb 24, 2024,04:31 PM IST

சென்னை: ரசிகர் ஒருவர் இறந்ததை அடுத்து, தனது ரசிகர்கள் தனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக தான் பயணம் செய்து அவர்களின்  ஊரிலேயே போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உணர்ச்சி பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நாளை விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் ரசிகர்களுக்காக முதல் முதலாக போட்டோ ஷூட் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் சிறந்த  நடிகராகவும், நடன இயக்குனராகவும், நடன அமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அம்மாவின் மீது கொண்டுள்ள அதீத அன்பால் இவர் அம்மாவுக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றார். இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது டிரஸ்ட் மூலம் உதவியும் செய்தும் வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்  கொடுத்தது. இதனை அடுத்து நிறைய வாய்ப்புகள்  லாரன்ஸ்சுக்கு வரத் தொடங்கியுள்ளன. 




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாகவும், விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத்தவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.


தமிழ் நடிகர்களுடன் இணைந்து போட்டோ எடுப்பதற்காக பல ரசிகர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த சேகர் என்ற ரசிகர் ஒருவர்  லாரன்ஸுடன் போட்டோ சூட் எடுப்பதற்காக சென்னை வரும் வழியில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் இறந்த ரசிகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம். தானே நீங்கள் உள்ள இடத்திற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.  இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், வணக்கம் .. நண்பர்களே.. ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் போட்டோ ஷூட் சந்திப்பின்போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இது மிகவும் மன வேதனையாக இருந்தது. என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக நான் பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளேன். நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் உள்ளது. நாளை சந்திப்போம் என லாரன்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்