ஆணாதிக்கம் - நாம் நன்கு அறிந்த, பொருள் உணர்ந்த சொல். அது என்ன, பெண்ணாதிக்கம்?
பெரும்பாலான ஆண்களிடம், நாம் பார்க்கும் ஆதிக்கக் குணம், பிடிவாதம், சுயநலம், பிறரை தன் தேவைக்காக பயன்படுத்தும் பண்பு, அடக்கியாள நினைக்கும் எண்ணம் போன்ற குணங்கள் சில பெண்களிடமும் இருப்பது தான் பெண்ணாதிக்கம். பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்ணாதிக்க சிந்தனைகளையும் பிரித்து உணர முடியாமல் பல பெண்கள், பலரை அவதிக்குள்ளாக்குவது நிறைய குடும்பங்களில் பார்க்க முடிகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி என்னிடம் ஆற்றுப்படுத்தலுக்காக வந்திருந்தனர். அந்த ஆண், மனச்சோர்வோடும், பெண் மன அழுத்தத்தோடும் இருப்பது தெரிந்தது. அந்த பெண் என்னோடு தனியாக தன் பிரச்சினையை பகிர ஆரம்பித்தாள். நாங்கள் காதலிக்கும் போதே எடுத்த முடிவு, திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குப் போகமாட்டேன், வீட்டில்தான் இருப்பேன், அவன் தான் சம்பாதிக்க வேண்டும் என்பது. அதனால் வேலையை விட்டு விட்டேன். வீட்டு வேலை செய்ய நான் என்ன வேலைக்காரியா? என்னால் செய்ய முடியாது? காதலிக்கும் போது, என் தேவைகளை நான் சொல்லாமலே, அவனே தெரிந்து கொண்டு செய்வான். இப்போது அவ்வாறு செய்வதில்லை. சொன்னால் கூட உடனே செய்வது இல்லை. அவங்க அம்மா, எங்கள் வீட்டுக்கு வரலாம். ஆனால் இரவு தங்கக்கூடாது. எனக்கு அது அசௌகரியமாக இருக்கிறது என்று சொன்னால் புரிந்து கொள்வதில்லை.
காதலிக்கும் போது நாங்கள் இரவு வண்டியில், நிறைய சுற்றுவோம். எப்பொழுதெல்லாம் நிறைய காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கிறான். பாசம் குறைந்துவிட்டது. யாரிடமும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என் முன்னால் அமர்ந்து, போனை ஸ்பீக்கரில் போட்டு பேசச் சொல்கிறேன். இதுல என்ன தப்பு. வெளியே கூப்பிட்டு போகிறேன் என சொல்லிவிட்டு, தாமதமாக வந்தால் எனக்கு பயங்கர கோபம் வரும். கதவைத் திறக்க மாட்டேன், என்னை அநாவசியமாகக் கோபப்படுத்தினால் கையில் கிடைக்கும் பொருட்களை உடைத்து விடுவேன், நான் போன் செய்தால், உடனே எடுக்க வேண்டும், இல்லை எனில் என் தலையே வெடித்து விடும், போன் செய்து கொண்டே இருப்பேன். என்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்வேன் என்று அவன் சொன்னதை, அவன் ஒழுங்காக செய்யவில்லை. எனவே எனக்கு ஒரே மன அழுத்தமாக உள்ளது. அதனால் அவனை அறையில் வைத்து பூட்டி விட்டேன். இது ஒரு தவறு என்று இங்கு கூட்டி வந்து விட்டார்கள் என்று சொன்னாள்.
அவளின் கணவன் என் வேலை நேரத்தில் என்னால் போனை எடுக்க முடியாமல் போனால், அவளின் போனை உடைத்து விடுகிறாள். அவள் எந்த நேரமும் கோபமாகவும், நான் அவளை சமாதானப்படுத்திக் கொண்டே இருப்பது, எல்லா நாளும் நடக்கிறது. வீட்டிற்கு வந்துவிட்டால் நான் வேறு யாருடனும் பேசக்கூடாது. தனியாக வெளியே செல்லவும் அனுமதி இல்லை. என் அம்மாவோடு வாரம் ஒரு முறை தான் பேச வேண்டும். அவளிடம் சொல்லாமல் ஏதாவது செய்து விட்டால் அவ்வளவுதான், எப்பொழுதும் பதட்டத்தோடும், பயத்தோடும் இருப்பதால், வீட்டுக்கு வரவேப் பிடிக்கவில்லை. என்னை மிரட்ட, பலமுறை தற்கொலை முயற்சி செய்துள்ளாள். போலீசுக்கு போன் செய்து விடுவாள், என்னால் சமாளிக்க முடியவில்லை என அழ ஆரம்பித்து விட்டான்.
இன்னொரு பெண். அவள் மாமியாரை பார்த்தாலே மயக்கம் போட்டு விழுந்து விடுவாள், தன் மாமியார் வீட்டுக்குக் கணவன் சென்று வந்தால், இவளுக்கு உடம்பு முடியாமல் போய்விடும். மாமியாரை, தன் மகனுக்கு சாதம் ஊட்ட அனுமதிக்க மாட்டாள். தொடக்கூட விடமாட்டாள். இன்னொரு கணவன், அவள் காதல் மனைவியை என்னிடம் அழைத்து வந்து, மேடம் இவளுக்கு நிறைய கோபம் வருகிறது. கோபம் வந்தால் எந்த இடம் என்று கூட பார்க்காமல் கைநீட்டி அடிக்கிறாள், எங்க அம்மாவையும் அடித்து விட்டாள். அதை மட்டும் மாற்ற முடியுமா? எனக் கேட்டான்.
ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லி வளர்ப்பதால், ஆண்களின் கண்ணீர் வெளியில் தெரியாமலேயே போய் விடுகிறது. இதனால் ஆண்களிடம் மன அழுத்தம் அதிகமாகி, மாரடைப்புக்கும், மது போதைக்கும் ஆளாகி விடுகிறார்கள். வெளியே செல்ல வெட்கப்பட்டு, தன் வேதனைகளை வெளியே சொல்லாமலே வாழ பழகிக் கொள்கிறார்கள். ஆண்களின் கண்ணீருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பெண்ணாதிக்க பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒரே பெண்ணாக, செல்லமாக வளர்வது, காதலிக்கும் பொழுது அல்லது திருமணமான புதிதில் நல்ல பெயர் வாங்குவதற்காகத் தம்பதியரில் ஒருவர் அடங்கிப் போவது, பொறுத்துக் கொள்வது, தியாகம் செய்வது போன்றவை இத்தகைய சூழலை ஏற்படுத்துகிறது.
சில ஆண்கள், தன் மனைவியை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்ற எண்ணத்தில் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பது மற்றும் தனித்து செயல்பட அனுமதிக்காதது, பெண்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தி, அது மன எழுச்சியாக (histeria)மாறி, பெண்ணாதிக்க செயல்களாக மாறிவிடுவதும், சில குடும்பங்களில் பார்க்க முடிகிறது.
ஆண், பெண் இருவரும், ஒருவர் மற்றொருவரின் உரிமையைப் புரிந்து, மதிப்பளித்து வாழப் பழக வேண்டும். மற்றவரின் சுதந்திரத்தை பறிப்பது, அடக்கி ஆள நினைப்பது, அடிமைப்படுத்துவது போன்றவை யார் செய்தாலும் குற்றமே. குடும்பச் சுமையை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிமனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வீட்டிலிருந்து இணையரை பிரித்துக் கொண்டு போக நினைப்பது தவறு. தன் குடும்பத்தை நேசிப்பதைப் போல், தன் இணையரின் குடும்பத்தையும் மதிக்க வேண்டும். ஒருவர், மற்றொருவரின் பணிச் சூழலை, பணிச் சுமையை புரிந்து, நடந்து கொள்ள வேண்டும். திருமண உறவில் நம்பிக்கையும், அன்பும் தான் அடித்தளம். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, உருவத்தை கேலி செய்வது, மட்டம் தட்டிப் பேசுவது, தன்மானத்தை சிதைப்பதை போன்றவை வரம்பு மீறும் பொழுது, ஆதிக்கமாக மாறுகிறது என்பதை இருவரும் உணர வேண்டும்.
ஒருவரை ஒருவர், ஆதிக்கம் செலுத்தாமல், அன்பு செலுத்தி வாழ வேண்டும். சுயமரியாதை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஒருவரின் நிறை குறைகளோடு, அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்றார் போல், தன் குடும்பத்திற்கு ஏற்றார் போல் தன் துணையை மாற்ற நினைப்பது தவறு. விட்டுக் கொடுப்பது என்பது இருவருக்குமானது. மனம் விட்டு பேசி, பரஸ்பர அன்பைப் பரிமாறி, ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தை, உரிமையை மதித்து வாழ்வதே ஒரு நல் இல்லறம்.
ஆணாதிக்கமும் வேண்டாம். பெண்ணாதிக்கமும் வேண்டாம். சுயமரியாதை மட்டுமே போதும்!
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
Vijay Rupani: விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
{{comments.comment}}