ஜப்பானை உலுக்கும் திடீர் காய்ச்சல்.. 4000 பேர் பாதிப்பு.. தொற்றுநோயாக அறிவித்தது அரசு!

Oct 13, 2025,06:21 PM IST

டோக்கியோ: ஜப்பானில் திடீரென அதிகரித்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது காய்ச்சலை தொற்றுநோய் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 


இந்த காய்ச்சல் காரணமாக, 4,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக வர வேண்டிய நேரத்தை விட ஐந்து வாரங்களுக்கு முன்பே இந்த காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இது ஆசியாவில் வைரஸ் பரவும் விதத்தில் ஒரு மாற்றத்தைக் குறிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகும் அபாயம் இருப்பதால், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது. 


இது ஒரு புதிய பெருந்தொற்று இல்லை என்றாலும், இதன் அளவு மற்றும் நேரம் மற்ற நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. குளிர்காலம் நெருங்கும்போது சுவாச நோய்கள் அதிகரிக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் 47 மாகாணங்களில் 28 மாகாணங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக டோக்கியோ, ஒகினாவா, ககோஷிமா போன்ற இடங்களில் 130க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.




இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. வைரஸின் மரபணு மாற்றம் அடைந்த ஒரு புதிய வகை, முன்பு இருந்ததை விட வலிமையாக உள்ளது. மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வெளியில் செல்வது குறைந்ததால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது. மாறிவரும் வானிலை மாற்றங்களும் வைரஸ் பரவுவதற்கு சாதகமாக அமைந்துள்ளன. பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்கள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாகிவிட்டனர். இதனால், வைரஸ் எளிதாகப் பரவுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தற்போதைய நிலையில் இது பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பருவகால காய்ச்சல் என்பதால், பெரும்பாலும் பழக்கமான H3N2 என்ற வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இருப்பினும், காய்ச்சல் வைரஸ்கள் எவ்வளவு வேகமாக மரபணு மாற்றம் அடைகின்றன என்பதையும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் இந்த திடீர் பரவல் உணர்த்துகிறது. எனவே, வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆரோக்கியமானவர்களுக்கு காய்ச்சல் அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், ஆபத்தானது அல்ல. எனவே, ஆரம்பத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் முக்கியம்.


காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் ஒரு நோய். இது தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த அறிகுறிகள் கடுமையாகவும் இருக்கலாம். குளிர்கால மாதங்களில் காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும். காய்ச்சல் மற்றும் கோவிட்-19 அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், உங்களுக்கு எது பாதித்துள்ளது என்பதை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இரண்டு நோய்களும் தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. ஆனால், இவை வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுவதால், சிகிச்சை முறைகளும் வேறுபடும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்