"என் மகன் எப்படியாச்சும் நடிகனாய்ரணும்".. சாதனையாளராக பார்த்து விட்டு மறைந்த நாசர் தந்தை!

Oct 11, 2023,10:09 AM IST

செங்கல்பட்டு: தனது மகனை நடிகனாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை சாதித்து விட்டு தனது 95 வயதில் மறைந்துள்ளார் நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா.


செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்தவர் மாபுப் பாஷா. 95 வயதாகும் இவர் நடிகர் நாசரின் தந்தை ஆவார். நகைகளைப் பாலிஷ் செய்யும் தொழில் பார்த்து வந்தவர் மாபுப் பாஷா. ஆனால் தனது மகன் நாசரை நடிகனாக பார்க்க ஆசைப்பட்டார். இதனால் அவரை நடிப்புக்காக முயற்சிக்குமாறு ஊக்குவித்தார்.




ஆனால் நாசருக்கோ நடிப்பில் ஆர்வம் இல்லை. ஆனாலும் தந்தையின் ஆசைக்காக நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார் நாசர். நடிப்புப் பயிற்சி  முடித்த நாசர் வாய்ப்பு தேடி அழைந்தார். வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்தார். 


எதுவும் சரிப்பட்டு வராமல் சொந்த ஊர் திரும்பினார். அப்போதும் தனது மகனை தேற்றி ஊக்கம் கொடுத்து மீண்டும் முயற்சி செய் என்று தட்டிக் கொடுத்தார் மாபுப் பாஷா. மீண்டும் தந்தையின் ஆசைக்காக வாய்ப்பு தேட ஆரம்பித்த நாசர் இந்த முறை தனது முயற்சியில் வெற்றி பெற்றார். வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தனித்தன்மையுடன் கூடிய நடிகனாக உருவாகினார். 


தான் ஏழையாக இருந்தாலும் தனது கனவில் "ரிச்" ஆக இருந்ததால் மாபுப் பாஷா ஜெயித்தா். ஏழை தந்தையின் கனவில் நடிகனாக ஆரம்பத்தில் தேன்றிய நாசார் நிஜ உலகிலும் மாபெரும் நடிகனானார். தமிழ் திரையுலகில் வில்லன், ஹீரோ, குணச்சித்ரம், இயக்குனர், தாயாரிப்பாளர்  என பன்முகத்தன்மையுடன் திகழ்ந்தவர் நாசர். தற்போது, நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார். 


நாசரின் இன்றைய நிலைக்கு அன்றே விதை போட்டவர் மாபுப் பாஷா. அவரது மறைவு நாசரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  செங்கல்பட்டில் உள்ள நாசரின் தம்பி வீட்டில் வசித்து வந்த நிலையில் மரணத்தைத் தழுவியுள்ளார் மாபுப் பாஷா. அவரது மறைவி்ற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்