டெல்லி: லோக்சபா தேர்தல் திருவிழாவின் கடைசி நாள் இன்று. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக திட்டமிடப்பட்டது. முதல் கட்டம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு, மூன்று என ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த ஏழு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏழு கட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அன்றே வெளிவர உள்ள நிலையில், இதற்காக இந்திய முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 10.02 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
எக்சிட் போல்களை செட்டப் செய்து விட்டது பாஜக.. மக்களே நம்பாதீர்கள்.. இந்தியா கூட்டணி கோரிக்கை!
இறுதி கட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிவுடன் நிறைவடைகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், என அனைவரும் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த இறுதி கட்ட தேர்தல் அமைதியுடனும் குழப்பங்கள் இல்லாமலும் நடைபெற வாக்குச் சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
{{comments.comment}}