டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க உள்ளார். இவர் வாசிக்கும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி நடைபெற உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனவரி 31ம் தேதி தொடங்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்படும். இந்த முறை பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 சனிக்கிழமை என்பதால், அன்று பங்குச்சந்தை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் விடுமுறை விடப்பட்டு, அதன்பின்னர் 2ம் கட்டம் மார்ச் 2வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது கூட்டத்தொடர் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் முடிவடையும்.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டின் போது தான் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அன்றைய நாள் தங்கத்தின் விலை 3 முறை மாற்றம் கண்டது. அதுமட்டும் இன்றி தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை வருமான வரிச் சலுகைகள் தரப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}