Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

Jan 18, 2025,08:06 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க உள்ளார். இவர் வாசிக்கும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி நடைபெற உள்ளது.




ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனவரி 31ம் தேதி தொடங்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்படும். இந்த முறை பட்ஜெட் தாக்கல்  பிப்ரவரி 1 சனிக்கிழமை என்பதால், அன்று பங்குச்சந்தை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் விடுமுறை விடப்பட்டு, அதன்பின்னர் 2ம் கட்டம் மார்ச் 2வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது கூட்டத்தொடர் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் முடிவடையும்.


கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டின் போது தான் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அன்றைய நாள் தங்கத்தின் விலை 3 முறை மாற்றம் கண்டது. அதுமட்டும் இன்றி தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை வருமான வரிச் சலுகைகள் தரப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்