மீன் பிடி தடை.. தமிழ்நாட்டில் முடிந்தது.. கேரளாவில் தொடங்கியது.. சப்ளை பாதிப்பு.. விலையும் உயர்வு!

Jun 17, 2024,05:59 PM IST

சென்னை: மீன் பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையில் மீன்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.


தமிழகத்தில் ஏப்ரல் 15 முதன் ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணமாக மீன்பிடி தடைகாலம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் ஆண்டு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் ஏதும்  மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருக்கும்.  61 நாட்களுக்கு இந்த மீன் பிடித தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், விசைப்படகுகள் கரையோரம் கட்டி வைக்கப்படும். இந்த ஆண்டிற்கான தடை காலம் தற்போது முடிவடைந்து விட்டது. 


இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களுக்கு தேவையான ஐஸ் மற்றும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஒரு சில படகுகள் ஒரு வாரமும்,  ஒரு சில படகுகள் ஒரு நாளிலும் கரை திரும்புவது வழக்கம். இதில் ஒரே நாளில் திரும்பும் படகுகள் மூலமாக பிடிக்கப்பட்ட மீன்கள் காசிமேடு மீன் சந்தையில்  நேற்று விற்பனை செய்யப்பட்டது. 




ஆனால்  எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கவில்லை. இதனால் காசிமேடு சந்தையில் மீன் விலை அதிகமாக இருந்தது. விசைப்படகுகள் மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் காசிமேடு மீன் சந்தையில்  ஏலம் முறையில், மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏல விற்பனை  இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை நடைபெற்று வரும். இந்த விற்பனையில் சென்னை மற்றும் அதனை  சுற்றியுள்ள  பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் வாங்கி சென்று மீன் விற்பனை செய்து வருகின்றனர். 


விலையைப் பொருத்தவரை பெரிய வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300க்கும், சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.600க்கும், வவ்வால் கிலோ ரூ. 600க்கும், கொடுவா கிலோ ரூ. 500க்கும், சங்கரா கிலோ ரூ.400க்கும், கடம்பா கிலோ ரூ. 450க்கும், இறால் கிலோ ரூ. 400க்கும், கானாங்கெளுத்தி கிலோ ரூ. 400க்கும், பாறை கிலோ ரூ. 600க்கும் என விற்பனை செய்யப்பட்டது.


இந்தநிலையில், அடுத்து கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவுக்கும் தமிழ்நாட்டிலிருந்து மீன் செல்லும். எனவே  தமிழ்நாட்டில் அதிக அளவில் மீன் கிடைத்தால்தான் சப்ளையை சரி செய்து விலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் மீன் விலை மேலும் உயரும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey

news

மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again

news

தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

news

தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

news

பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

news

சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

அதிகம் பார்க்கும் செய்திகள்