மதுரை: மதுரையில், வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் நல்ல மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் வைகையணையில் நீர் கொள்ளவை எட்டியது. இதனால் உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு மொபையில் போனில் sms அலார்ட்டும் விடப்பட்டு வருகிறது. மழை அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது.

மொத்த கொள்ளளவு 71 அடி என்பதால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சுமார் 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர் பாசன மாவட்டங்கள் பயனடையும். வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்த நிகழ்வு அபூர்வ நிகழ்வாகும் என்பதால் ஆற்றில் வெள்ள பெருக்கை காண மக்கள் திரண்ட வருகின்றனர். அதேசமயம், மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக, திறந்து விடப்பட்ட தண்ணீர் இது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை சிம்மக்கல் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் இரு கரைகளைத் தொட்டு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இருகரையோரமும் வாகனங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}