புதுடில்லி: இந்தியாவில் அதிகாலை 3 மணி முதல் நாவிமான சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10, 11 இயங்குதளத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக நேற்று முதல் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் எனவும், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நாடு முழுவதும் விமான சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாகவும், அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதள பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட பிரச்சனை படிப்படியாக சீராகி வருகிறது. இன்று மதியத்திற்குள் அனைத்தும் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி தருவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}