சென்னை: பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தில் உள்ள கோவில்களுகக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் குறித்த முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை போலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள கேது ஸ்தலம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாரணாசி உள்பட.. 57 தொகுதிகளில்.. விறுவிறு இறுதிக் கட்ட வாக்குப் பதிவு!
புதுச்சேரியில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை 108 சிதறு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்ததுடன், அங்கு சிறிது நேரம் தியானமும் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபாடு செய்துள்ளார். இவ்வாறாக, தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். பிரதமர் மோடி பாணியை பின்பற்றி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்து வருவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டி தான் இந்த சாமி தரிசனங்கள் எல்லாம் நடப்பதாக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}