பிரதமர் மோடியைப் பின்பற்றும் அண்ணாமலை.. கோவில் கோவிலாக சென்று.. சாமி கும்பிடுகிறார்!

Jun 01, 2024,12:41 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தில் உள்ள கோவில்களுகக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.


லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் குறித்த முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.




ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு  தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பிரதமர் மோடியை போலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள கேது ஸ்தலம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 


பிரதமர் மோடியின் வாரணாசி உள்பட.. 57 தொகுதிகளில்.. விறுவிறு இறுதிக் கட்ட வாக்குப் பதிவு!



புதுச்சேரியில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை 108 சிதறு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்ததுடன், அங்கு சிறிது நேரம் தியானமும் செய்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபாடு செய்துள்ளார். இவ்வாறாக, தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.  பிரதமர் மோடி பாணியை பின்பற்றி பாஜக  மாநிலத்தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்து வருவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டி தான் இந்த சாமி தரிசனங்கள் எல்லாம் நடப்பதாக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்