சென்னை: ரூ.3,250 கோடி ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்.
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப் நிறுவனம் ஃபோர்டு. கடந்த 2021ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலிருந்து வெளியேறிய ஃபோர்டு (Ford) நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் தனது உற்பத்தியைத் தொடங்குகிறது. சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் ஃபோர்டின் ஆலையை நவீனமயமாக்கி செயல்பட உள்ளது.
அடுத்த தலைமுறை இன்ஜின்களை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் ₹3,250 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று (அக்டோபர் 31, 2025) கையெழுத்திட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாபெரும் முதலீட்டின் மூலம், ஃபோர்டு நிறுவனம் தனது மறைமலைநகர் ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான அதிநவீன இன்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த உற்பத்தி பெரும்பாலும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வாய்ப்பில்லை என்றாலும், பிற சர்வதேச சந்தைகள் இலக்காக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2,35,000 என்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், 2029ம் ஆண்டு தான் உற்பத்தி தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}