டெல்லி: கிர்கிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு மாணவர்கள் மீது திடீரென ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மாணவர்கள் தங்களது இருப்பிடங்களிலேயே இருக்குமாறும், வெளியில் வர வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்திய மாணவர்கள் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் எக்ஸ் தளம் மூலமாக அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக கும்பல் ஒன்று விடுதி ஒன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் நாட்டு மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் சில பாகிஸ்தான் மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு வரவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
மே 13ம் தேதியன்று கிர்கிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களுக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீரென சண்டை மூண்டது. இதுதான் கலவரத்திற்குக் காரணம். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் விடுதிக்குள் புகுந்து கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தலைநகர் பிஷக்கில் உள்ள பல்வேறு மருத்துவ பல்கலைக்கழகங்களின் விடுதிகளைக் குறி வைத்து கும்பல்கள் தாக்குதலில் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாத, பாகிஸ்தான், வங்கதேச மாணவர்களை அவர்கள் குறி வைத்து தாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷரீப் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடந்திருப்பது வருத்தம் தருவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய மாணவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். 0555710041 என்ற எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
திருச்சியில் எம்ஜிஆர்.. நாகையில் அண்ணா.. திராவிட சென்டிமென்டை கையில் எடுக்கும் விஜய்!
{{comments.comment}}