மயிலாடுதுறையை மிரட்டிய சிறுத்தை.. அரியலூரில் இருப்பதாக..  வனத்துறையினர் எச்சரிக்கை!

Apr 12, 2024,12:33 PM IST

அரியலூர்: மயிலாடுதுறையில் மக்களை மிரட்டிய சிறுத்தையும் அரியலூர் மாவட்டம் செந்துறையில்  நடமாடும் சிறுத்தையும் ஒன்று என வனத்துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


கடந்த இரண்டாம் தேதி மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக சிசிடிவி கேமரா வெளிவந்தது. இதனை அடுத்து பல்வேறு கட்டங்களாக சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. இதனை அடுத்து  மயிலாடுதுறையிலிருந்து சிறுத்தை தஞ்சை மாவட்டத்தை நோக்கி இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் 25 கேமராக்கள், கூண்டுகள், என பல பகுதிகளில் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். 




ஆனாலும் சிறுத்தை பிடிபடவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொள்ளிடப் பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை தற்போது அரியலூர் செந்துறையை சுற்றி உள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஏனெனில் செந்துறை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டி சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் வீட்டின் அருகே பார்த்ததாகவும், அதே நேரத்தில் நேற்று இரவு அரியலூர் ஆற்றுக்கால் பகுதிகளில் இருந்த காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டது.


இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கியால் தெரிவித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியும் வருகின்றனர். மேலும் சுண்ணாம்புக்கல் சுரங்க அடர் வனப் பகுதிகளில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் சேர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும் செந்தூரில் உள்ள சிறுத்தையும் ஒன்றாக இருக்குமா என்பது உறுதி செய்ய முடியவில்லை.

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையும், இதுவும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. கால் தடங்களை ஆய்வு செய்த பின்னரே இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு சிறுத்தைகளாய் என்பதை உறுதி செய்ய முடியும் என வனத்துறையினர் நேற்று கூறிவந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் உள்ள சிறுத்தை இடம்பெயர்ந்து இன்று அரியலூர் செந்துறை பகுதியில் வந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.


மயிலாடுதுறையில் உள்ள சிறுத்தை ஏற்கனவே கொள்ளிடப் பகுதி காடுகளில் வசித்திருக்கலாம். அது தப்பித்தவறி வழி தெரியாமல் மயிலாடுதுறை பக்கம் வந்திருக்கலாம்.

மீண்டும் அது இடத்திற்கே செல்ல இது போன்று இடம்பெயர்வு இருக்கலாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்