SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

Nov 03, 2025,05:37 PM IST

சென்னை: முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று  திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் SIR பணிகளை மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவத்தில், திமுக சார்பில்  சென்னை தி.நகரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், சார் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று  திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம். இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே SIR நாங்கள் வரவேற்கிறோம்.


நேர்மையாக, வெமிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏன் இவர்கள் பயப்பட வேண்டும். பீகாரை தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டாம். இறந்தவர்களுக்கு வாக்கு இருக்கிறது, உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. இதை விட வேறு ஒன்று ஜனநாயகத்திற்கு கேலிக்கூத்து இல்லை. இதனால் தான் நாங்கள் SIRயை நாங்கள் வரவேற்றோம்  என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்

news

எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி

news

எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்

news

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி

news

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்

news

கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

news

20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

news

புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

news

ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்