சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இத்கிடையே, பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். விசாரணையை சந்திக்க வஏண்டும் என்று அவரது சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவெகெளடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹசன் தொகுதி எம்.பியாகவும் இருக்கிறார். இவர் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வக்கிரமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. பிரஜ்வலை கைது செய்ய ஏற்கனவே எஸ் ஐ டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட்டும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனே முடக்க உத்தரவு கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சித்தப்பா குமாரசாமி கோரிக்கை
இதற்கிடையே பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அவரது சித்தப்பா எச்டி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா முதலில் நாடு திரும்ப வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். எனது தந்தைதான் இந்த கோரிக்கையை விடுக்க விரும்பினார். அவருக்குப் பதில் நான் கோரிக்கை விடுக்கிறேன். உனது (பிரஜ்வல்) வளர்ச்சிக்காக தனது அரசியலையே அர்ப்பணித்துள்ளார் தாத்தா. அவர் மீதும், கட்சி மீதும் மரியாதை வைத்திருக்கும் நீ இப்படி தலைமறைவாக இருப்பது சரியாக இருக்காது. 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி நேரத்திலோ நாடு திரும்பு என்று தனது அண்ணன் மகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குமாரசாமி.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}