பெங்களூர் திரும்பி.. விசாரணையை சந்திக்க வேண்டும்.. பிரஜ்வலுக்கு சித்தப்பா குமாரசாமி கோரிக்கை

May 21, 2024,03:03 PM IST

சென்னை:  பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இத்கிடையே, பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். விசாரணையை சந்திக்க வஏண்டும் என்று அவரது சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


முன்னாள் பிரதமர் தேவெகெளடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹசன் தொகுதி எம்.பியாகவும் இருக்கிறார். இவர் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வக்கிரமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.




இதன் பின்னர் இதில்  சம்பந்தப்பட்ட பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. பிரஜ்வலை கைது செய்ய ஏற்கனவே எஸ் ஐ டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட்டும் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனே முடக்க உத்தரவு கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


சித்தப்பா குமாரசாமி கோரிக்கை


இதற்கிடையே பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அவரது சித்தப்பா எச்டி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா முதலில் நாடு திரும்ப வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  எனது தந்தைதான் இந்த கோரிக்கையை விடுக்க விரும்பினார். அவருக்குப் பதில் நான் கோரிக்கை விடுக்கிறேன். உனது (பிரஜ்வல்) வளர்ச்சிக்காக தனது அரசியலையே அர்ப்பணித்துள்ளார் தாத்தா. அவர் மீதும், கட்சி மீதும் மரியாதை வைத்திருக்கும் நீ இப்படி தலைமறைவாக இருப்பது சரியாக இருக்காது. 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி நேரத்திலோ நாடு திரும்பு என்று தனது அண்ணன் மகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குமாரசாமி.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்