பெங்களூர் திரும்பி.. விசாரணையை சந்திக்க வேண்டும்.. பிரஜ்வலுக்கு சித்தப்பா குமாரசாமி கோரிக்கை

May 21, 2024,03:03 PM IST

சென்னை:  பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இத்கிடையே, பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். விசாரணையை சந்திக்க வஏண்டும் என்று அவரது சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


முன்னாள் பிரதமர் தேவெகெளடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹசன் தொகுதி எம்.பியாகவும் இருக்கிறார். இவர் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வக்கிரமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.




இதன் பின்னர் இதில்  சம்பந்தப்பட்ட பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. பிரஜ்வலை கைது செய்ய ஏற்கனவே எஸ் ஐ டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட்டும் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனே முடக்க உத்தரவு கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


சித்தப்பா குமாரசாமி கோரிக்கை


இதற்கிடையே பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அவரது சித்தப்பா எச்டி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா முதலில் நாடு திரும்ப வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  எனது தந்தைதான் இந்த கோரிக்கையை விடுக்க விரும்பினார். அவருக்குப் பதில் நான் கோரிக்கை விடுக்கிறேன். உனது (பிரஜ்வல்) வளர்ச்சிக்காக தனது அரசியலையே அர்ப்பணித்துள்ளார் தாத்தா. அவர் மீதும், கட்சி மீதும் மரியாதை வைத்திருக்கும் நீ இப்படி தலைமறைவாக இருப்பது சரியாக இருக்காது. 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி நேரத்திலோ நாடு திரும்பு என்று தனது அண்ணன் மகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குமாரசாமி.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்