அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் பயணம் செய்த நிலையில் அவரும் இதில் உயிர் பிழைக்கவில்லை.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த பகுதியில் இருந்து கரும்புகை சூழ்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 அடி உயரத்தில் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் விமானத்திற்குள் அமர்ந்திருந்த புகைப்படமும் வெளியான நிலையில் தற்போது அவரும் இதில் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பிடித்ததாகவும், தீயை அணைக்கும் பணிக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பசுமை வழித்தடம் அமைக்கவும், மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் என்னுடன் பேசியுள்ளார், முழு ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}