பெங்களூரு: கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.
"அப்பா இறந்து விட்டார்" என்று அவரது மகன் சாண்டி உம்மன் தனது பேஸ்புக்கில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, இரண்டு முறை கேரள முதல்வராக இருந்தவர். 2004ம் ஆண்டு முதல் 2006 வரை முதல் முறையும், 2011 முதல் 16 முதல் இரண்டாவது முறையும் முதல்வராக இருந்தவர் உம்மன் சாண்டி. கோட்டயம் மாவட்டம் புதுப்புள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட 50 வருட காலம் எம்எல்ஏவாக இருந்தவர் உம்மன் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரில் தங்கியிருந்தார். உம்மன் சாண்டி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரே ஆண்டில்தான் நானும், உம்மன் சாண்டியும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மாணவர்களாக இருந்தபோது ஒரே மேடையில்தான் இருவரது அரசியலும் தொடங்கியது. ஒரே காலகட்டத்தில் நாங்கள் பொது வாழ்வை ஆரம்பித்தோம். அவருக்கு பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகி. மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}