கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம்

Jul 18, 2023,07:32 AM IST

பெங்களூரு: கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.


"அப்பா இறந்து விட்டார்" என்று அவரது மகன் சாண்டி உம்மன் தனது பேஸ்புக்கில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார்.




காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, இரண்டு முறை கேரள முதல்வராக இருந்தவர். 2004ம் ஆண்டு முதல் 2006 வரை முதல் முறையும், 2011 முதல் 16 முதல் இரண்டாவது முறையும் முதல்வராக இருந்தவர் உம்மன் சாண்டி.  கோட்டயம் மாவட்டம் புதுப்புள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட 50 வருட காலம் எம்எல்ஏவாக இருந்தவர் உம்மன் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில காலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால்  சிகிச்சைக்காக பெங்களூரில் தங்கியிருந்தார்.  உம்மன் சாண்டி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரே ஆண்டில்தான் நானும், உம்மன் சாண்டியும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மாணவர்களாக இருந்தபோது ஒரே மேடையில்தான் இருவரது அரசியலும் தொடங்கியது. ஒரே காலகட்டத்தில் நாங்கள் பொது வாழ்வை ஆரம்பித்தோம்.  அவருக்கு பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகி. மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்