பெங்களூரு: கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.
"அப்பா இறந்து விட்டார்" என்று அவரது மகன் சாண்டி உம்மன் தனது பேஸ்புக்கில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, இரண்டு முறை கேரள முதல்வராக இருந்தவர். 2004ம் ஆண்டு முதல் 2006 வரை முதல் முறையும், 2011 முதல் 16 முதல் இரண்டாவது முறையும் முதல்வராக இருந்தவர் உம்மன் சாண்டி. கோட்டயம் மாவட்டம் புதுப்புள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட 50 வருட காலம் எம்எல்ஏவாக இருந்தவர் உம்மன் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரில் தங்கியிருந்தார். உம்மன் சாண்டி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரே ஆண்டில்தான் நானும், உம்மன் சாண்டியும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மாணவர்களாக இருந்தபோது ஒரே மேடையில்தான் இருவரது அரசியலும் தொடங்கியது. ஒரே காலகட்டத்தில் நாங்கள் பொது வாழ்வை ஆரம்பித்தோம். அவருக்கு பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகி. மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}