பாஜக கதவைத் திறந்திருக்கலாம்.. நாங்க சாத்திட்டோம் - அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Feb 07, 2024,06:23 PM IST
தஞ்சாவூர்:   பாஜக வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம் என்று  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் லடாய் ஏற்பட்டு பாஜகவை வெளியேற்றி விட்டது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்துக்களால் கொந்தளித்த அக்கட்சி தலைமை, கூட்டணியை விட்டு பாஜகவை விலக்குவதாக தீர்மானம் போட்டு அதிர வைத்தது.

இவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. இந்த நிலையில் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜக தவிப்பில் உள்ளது. மீண்டும் கூட்டணியில் இடம்பெறுவதற்காக பல்வேறு வழிகளில்  முயன்று வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கூட, இதில் இறங்கியுள்ளார்.



இந்த நிலையில் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமைச்சர் அமித் ஷா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்புகள் துளிர்த்திருப்பதாக பலரும் கருதினர்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தேங்காய் உடைப்பது போல சொல்லி விட்டார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசுகையில்,   கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். அவர்கள் வேண்டுமானால் கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம். முன் வைத்த காலை நாங்கள் எப்போதும் பின் வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

இதனால்  பாஜக தரப்பு டென்ஷனாகியுள்ளது. அமித்ஷா போன்ற தலைவரின் கருத்தை ஜெயக்குமாரை விட்டு கேலி செய்வது போல அதிமுக தலைமை பதிலளிக்க வைத்துள்ளதாக அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நிலவும் சண்டையைப் பார்த்தால் கூட்டணி மீண்டும் ஏற்படுவது சிரமம் போலத்தான் தெரிகிறது.

அரசியலில் எதுவும் நடக்கலாம்.. எப்போதும் முடிவுகள் மாறலாம்.. என்ன மாதிரியாகவும் முடிவெடுக்கலாம் என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்