பாஜக கதவைத் திறந்திருக்கலாம்.. நாங்க சாத்திட்டோம் - அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Feb 07, 2024,06:23 PM IST
தஞ்சாவூர்:   பாஜக வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம் என்று  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் லடாய் ஏற்பட்டு பாஜகவை வெளியேற்றி விட்டது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்துக்களால் கொந்தளித்த அக்கட்சி தலைமை, கூட்டணியை விட்டு பாஜகவை விலக்குவதாக தீர்மானம் போட்டு அதிர வைத்தது.

இவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. இந்த நிலையில் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜக தவிப்பில் உள்ளது. மீண்டும் கூட்டணியில் இடம்பெறுவதற்காக பல்வேறு வழிகளில்  முயன்று வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கூட, இதில் இறங்கியுள்ளார்.



இந்த நிலையில் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமைச்சர் அமித் ஷா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்புகள் துளிர்த்திருப்பதாக பலரும் கருதினர்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தேங்காய் உடைப்பது போல சொல்லி விட்டார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசுகையில்,   கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். அவர்கள் வேண்டுமானால் கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம். முன் வைத்த காலை நாங்கள் எப்போதும் பின் வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

இதனால்  பாஜக தரப்பு டென்ஷனாகியுள்ளது. அமித்ஷா போன்ற தலைவரின் கருத்தை ஜெயக்குமாரை விட்டு கேலி செய்வது போல அதிமுக தலைமை பதிலளிக்க வைத்துள்ளதாக அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நிலவும் சண்டையைப் பார்த்தால் கூட்டணி மீண்டும் ஏற்படுவது சிரமம் போலத்தான் தெரிகிறது.

அரசியலில் எதுவும் நடக்கலாம்.. எப்போதும் முடிவுகள் மாறலாம்.. என்ன மாதிரியாகவும் முடிவெடுக்கலாம் என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்