கர்நாடக காங். அரசின் அடுத்த அதிரடி.. ஆக. 5 முதல் 200 யூனிட் மின்சாரம் Free!

Aug 02, 2023,05:00 PM IST
பெங்களூரு : கர்நாடகாவில் 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம் என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கிரக ஜோதி திட்டம் என்ற பெயரில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம், 200 யூனிட் வரை இலவச என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ல் துவங்கப்பட உள்ளது. முதல்வர் சித்தராமைய்யா இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இலவச மின்சார பெற தகுதியான வாவிக்கையாளர்கள் சேவா சிந்து போர்டல் என்ற கர்நாடக அரசின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.



இது தவிர அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சார சேவை வழங்கப்பட உள்ளதாக கர்நாடக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் விரைவில் துவங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இலவச மின்சார திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் ஜூலை மாதத்திற்கான மின்கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் செலுத்த வேண்டியது கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்தினி பால் ஆகஸ்ட் 01 ம் தேதி முதல் விலை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் தற்போது இலவச மின்சார திட்டம் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களை அப்படியே கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக மொழியாக அறிவித்து தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பஸ்  பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது போல கர்நாடகாவிலும் வழங்கியுள்ளனர். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். தமிழ்நாட்டிலோ, எந்த மாநிலப் பெண்களாக, திருநங்கையராக இருந்தாலும் கூட இந்த சலுகையை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?

news

தெரியுமா...?

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

news

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கு.. ஈரான் மீண்டும் எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்