கர்நாடக காங். அரசின் அடுத்த அதிரடி.. ஆக. 5 முதல் 200 யூனிட் மின்சாரம் Free!

Aug 02, 2023,05:00 PM IST
பெங்களூரு : கர்நாடகாவில் 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம் என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கிரக ஜோதி திட்டம் என்ற பெயரில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம், 200 யூனிட் வரை இலவச என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ல் துவங்கப்பட உள்ளது. முதல்வர் சித்தராமைய்யா இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இலவச மின்சார பெற தகுதியான வாவிக்கையாளர்கள் சேவா சிந்து போர்டல் என்ற கர்நாடக அரசின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.



இது தவிர அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சார சேவை வழங்கப்பட உள்ளதாக கர்நாடக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் விரைவில் துவங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இலவச மின்சார திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் ஜூலை மாதத்திற்கான மின்கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் செலுத்த வேண்டியது கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்தினி பால் ஆகஸ்ட் 01 ம் தேதி முதல் விலை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் தற்போது இலவச மின்சார திட்டம் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களை அப்படியே கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக மொழியாக அறிவித்து தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பஸ்  பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது போல கர்நாடகாவிலும் வழங்கியுள்ளனர். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். தமிழ்நாட்டிலோ, எந்த மாநிலப் பெண்களாக, திருநங்கையராக இருந்தாலும் கூட இந்த சலுகையை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்