டெல்லி: 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதில் சிறந்த நடிகராக காந்தாரா பட ஹீரோவும், இயக்குநருமான ரிஷாப் ஷெட்டி தேர்வாகியுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்திற்கான, நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த 2022ம் ஆண்டுக்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படத்தில் பணியாற்றிய சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.அதேபோல் சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புக்காக கேமராமேன் ரவிவர்மன் தட்டி சென்றார். பொன்னியின் செல்வன் படம் மட்டும் மொத்தம் 4 விருதுகளை வாரி குவித்துள்ளது.
யாஷ் நடித்த கேஜிஎப் 2 சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையாகவும் மற்றும் சிறந்த நடன காட்சிகளுக்காக மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் 2 விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை மான்சி பரேக்குடன் நடிகை நித்யா மேனன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது நீனா குப்தாவுக்குக் கிடைத்துள்ளது. துணை நடிகர் விருது பவன் ராஜ் மல்ஹோத்ராவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாலிகாபுரம் படத்தில் நடித்த மாஸ்டர் ஸ்ரீபத் பெறுகிறார்.
சிறந்த பொழுதுபோக்கு, சண்டை பயிற்சி, நடிகர் என மூன்று பிரிவுகளில் கன்னட மொழியின் காந்தாரா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக கேசரியா என்ற பாடலை பாடிய அர்ஜித் சிங் சிறந்த பின்னணிப் பாடகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் 2022 ஆம் ஆண்டு சிறந்த படமாக மலையாளத்தில் வெளியான ஆட்டம் திரைப்படம் தட்டிச் சென்றது.
மலையாளத்தில் வெளியான சவுதி வெல்லக்கா படத்தின் பாடலுக்காக 2022 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருது பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக ப்ரீதம் பெறுகிறார்.
சிறந்த படங்களாக தமிழில் பொன்னியின் செல்வன் 1, தெலுங்கில் கார்த்திகேயா, கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . தாதா சாகேப் பால்கே விருது பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}