சென்னை : முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் 1 முதல் 3 நாள் உற்சவமாகவும், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் 10 உற்சவமாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
சிவன் - பார்வதியின் மகனான விநாயகப் பெருமான் சிறுவனமாக இருந்த போது, ஒருமுறை அவரை வீட்டின் காவலாக இருக்க சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என சொல்லி விட்டு பார்வதி தேவி பூஜை செய்ய சென்று விட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த சிவ பெருமான் வீட்டிற்குள் செல்ல முயற்சித்தார். ஆனால் விநாயகர் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபம் கொண்ட சிவன், சிறுவன் என்று பாராமல் விநாயகருடன் சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகரித்து விநாயகரின் தலையை துண்டித்து விட்டார் சிவ பெருமான்.
அந்த சமயத்தில் அங்கு வந்த பார்வதி தேவி, கணபதியின் தலை துண்டிக்கப்பட்டதை கண்டு பதறி, கதறினாள். சிவன் மீது கோபம் கொண்ட பார்வதி தேவி, கணபதியின் உயிரை மீட்டு தராவிட்டால் இந்த உலகையே அழித்து விடுவதாக ஆக்ரோஷம் அடைந்தாள். பார்வதியின் பேச்சை கேட்டு தனது தவறை உணர்ந்த சிவ பெருமான், சிவ கணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் வழியில் முதலில் இருக்கும் உயிரினத்தின் தலையை கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
சிவ கணகங்கள் சென்ற வழியில் முதலில் தென்பட்ட யானை தான். அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். யானையின் தலையை கொண்டு விநாயகரை மீண்டும் உயிர் பெற செய்தார் சிவபெருமான். அவ்வாறு விநாயகர், மீண்டும் புதிய பிறவி எடுத்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்கிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 18 ம் தேதி காலத 11.39 துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை சதுர்த்தி திதி உள்ளதால் இரண்டு நாட்களும் விநாயகரை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்த புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து, அந்த சிலைக்கு அருகம்புல், எருகம்பூ மாலை அணிவித்து, விநாயகருக்கு பிரியமான மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, பழ வகைகள், சுண்டல், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட வேண்டும். வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை ஒன்றரை நாளுக்கு பிறகு அல்லது 3வது நாளில் எடுத்துச் சென்று ஓடும் நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள், தடைகள், தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் பெருகும், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}