"கணபதி ராஜா வந்தாராம்"... வெற்றிகள் தரும் விநாயகர் சதுர்த்தி!

Sep 18, 2023,11:52 AM IST

சென்னை : முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் 1 முதல் 3 நாள் உற்சவமாகவும், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் 10 உற்சவமாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.


சிவன் - பார்வதியின் மகனான விநாயகப் பெருமான் சிறுவனமாக இருந்த போது, ஒருமுறை அவரை வீட்டின் காவலாக இருக்க சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என சொல்லி விட்டு பார்வதி தேவி பூஜை செய்ய சென்று விட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த சிவ பெருமான் வீட்டிற்குள் செல்ல முயற்சித்தார். ஆனால் விநாயகர் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபம் கொண்ட சிவன், சிறுவன் என்று பாராமல் விநாயகருடன் சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகரித்து விநாயகரின் தலையை துண்டித்து விட்டார் சிவ பெருமான்.


அந்த சமயத்தில் அங்கு வந்த பார்வதி தேவி, கணபதியின் தலை துண்டிக்கப்பட்டதை கண்டு பதறி, கதறினாள். சிவன் மீது கோபம் கொண்ட பார்வதி தேவி, கணபதியின் உயிரை மீட்டு தராவிட்டால் இந்த உலகையே அழித்து விடுவதாக ஆக்ரோஷம் அடைந்தாள். பார்வதியின் பேச்சை கேட்டு தனது தவறை உணர்ந்த சிவ பெருமான், சிவ கணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் வழியில் முதலில் இருக்கும் உயிரினத்தின் தலையை கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.




சிவ கணகங்கள் சென்ற வழியில் முதலில் தென்பட்ட யானை தான். அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். யானையின் தலையை கொண்டு விநாயகரை மீண்டும் உயிர் பெற செய்தார் சிவபெருமான். அவ்வாறு விநாயகர், மீண்டும் புதிய பிறவி எடுத்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்கிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 18 ம் தேதி காலத 11.39 துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை சதுர்த்தி திதி உள்ளதால் இரண்டு நாட்களும் விநாயகரை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.


விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்த புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து, அந்த சிலைக்கு அருகம்புல், எருகம்பூ மாலை அணிவித்து, விநாயகருக்கு பிரியமான மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, பழ வகைகள், சுண்டல், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட வேண்டும். வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை ஒன்றரை நாளுக்கு பிறகு அல்லது 3வது நாளில் எடுத்துச் சென்று ஓடும் நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள், தடைகள், தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் பெருகும், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்