டெல்லி: பிரபலமான ரேமான்ட் நிறுவன அதிபர் கெளதம் சிங்கானியாவுக்கும், அவரது மனைவி நவாஸ் மோடிக்கும் இடையிலான மோதலால் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது சண்டை மற்றும் பிரிவால் ரேமான்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு பெரிதாக சரிந்து விட்டது. இதனால் ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து விட்டதாம்.
இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவனம் ரேமான்ட்ஸ். இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் கெளதம் சிங்கானியா. இவரது மனைவி நவாஸ் மோடி. ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் கிளினிக்குகளை இந்தியாவில் பிரபலமாக்கியவர் நவாஸ் மோடி.
32 வருட திருமண வாழ்க்கையில் இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவர்களது மண வாழ்க்கையில் புயல் வீசி வருகிறது. இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தன்னையும் தனது மகளையும் சிங்கானியா கை நீட்டி அடித்து விட்டார் என்று நவாஸ் மோடி புகார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை விட்டுப் பிரிந்தது, அவரை கை நீட்டி அடித்தது போன்ற செய்தி காட்டுத் தீ போல பரவி தற்போது ரேமான்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பில் தீ வைத்து விட்டது. அதன் பங்கு மதிப்புகள் வேகமாக சரிந்து ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாம்.
தற்போது கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு சட்ட நிறுவனத்தை வைத்துக் கொண்டு மணமுறிவு குறித்த பேச்சுக்களில் ஈடுட்டுள்ளனர். ரேமான்ட் நிறுவன பங்குகளில் 75 சதவீதத்தை கேட்கிறாராம் நவாஸ் மோடி. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி விட்டாராம் சிங்கானியா. நான் பங்கு கேட்பது எனது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான். நான் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் எனது மகள்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று வாதிடுகிறார் நவாஸ் மோடி.

இந்தத் தம்பதிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க பல்வேறு தொழிலதிபர்கள் முயன்று வருகிறார்களாம். முகேஷ் அம்பானி வரைக்கும் கூட பிரச்சினை போயுள்ளதாக கூறப்படுகிறது. ரேமான்ட் நிறுவன இயக்குநர்கள் குழுவில் நவாஸ் மோடியும் உள்ளார். இதுதவிர தனிப்பட்ட முறையில் பாடி ஆர்ட் என்ற பிட்னஸ் மையங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
பொண்டாட்டியை அடிச்சாலோ அல்லது பகைச்சுக்கிட்டாலோ இதுதான் கதி.. அது சாதாரண பெரியசாமியா இருந்தாலும் சரி.. இல்லாட்டி ரேமான்ட் சிங்கானியாவா இருந்தாலும் சரி..!
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}