டெல்லி: பிரபலமான ரேமான்ட் நிறுவன அதிபர் கெளதம் சிங்கானியாவுக்கும், அவரது மனைவி நவாஸ் மோடிக்கும் இடையிலான மோதலால் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது சண்டை மற்றும் பிரிவால் ரேமான்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு பெரிதாக சரிந்து விட்டது. இதனால் ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து விட்டதாம்.
இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவனம் ரேமான்ட்ஸ். இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் கெளதம் சிங்கானியா. இவரது மனைவி நவாஸ் மோடி. ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் கிளினிக்குகளை இந்தியாவில் பிரபலமாக்கியவர் நவாஸ் மோடி.
32 வருட திருமண வாழ்க்கையில் இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவர்களது மண வாழ்க்கையில் புயல் வீசி வருகிறது. இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தன்னையும் தனது மகளையும் சிங்கானியா கை நீட்டி அடித்து விட்டார் என்று நவாஸ் மோடி புகார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை விட்டுப் பிரிந்தது, அவரை கை நீட்டி அடித்தது போன்ற செய்தி காட்டுத் தீ போல பரவி தற்போது ரேமான்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பில் தீ வைத்து விட்டது. அதன் பங்கு மதிப்புகள் வேகமாக சரிந்து ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாம்.
தற்போது கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு சட்ட நிறுவனத்தை வைத்துக் கொண்டு மணமுறிவு குறித்த பேச்சுக்களில் ஈடுட்டுள்ளனர். ரேமான்ட் நிறுவன பங்குகளில் 75 சதவீதத்தை கேட்கிறாராம் நவாஸ் மோடி. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி விட்டாராம் சிங்கானியா. நான் பங்கு கேட்பது எனது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான். நான் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் எனது மகள்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று வாதிடுகிறார் நவாஸ் மோடி.

இந்தத் தம்பதிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க பல்வேறு தொழிலதிபர்கள் முயன்று வருகிறார்களாம். முகேஷ் அம்பானி வரைக்கும் கூட பிரச்சினை போயுள்ளதாக கூறப்படுகிறது. ரேமான்ட் நிறுவன இயக்குநர்கள் குழுவில் நவாஸ் மோடியும் உள்ளார். இதுதவிர தனிப்பட்ட முறையில் பாடி ஆர்ட் என்ற பிட்னஸ் மையங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
பொண்டாட்டியை அடிச்சாலோ அல்லது பகைச்சுக்கிட்டாலோ இதுதான் கதி.. அது சாதாரண பெரியசாமியா இருந்தாலும் சரி.. இல்லாட்டி ரேமான்ட் சிங்கானியாவா இருந்தாலும் சரி..!
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}