- மஞ்சுளா தேவி
திருநெல்வேலி: நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் வெள்ள பாதிப்பு தொடர்வதால், இரு மாவட்டங்களிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு ஏரிகள் உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் மளமளவென கிராமம் நகரம் என ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஏற்கனவே வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்திருப்பதால், தண்ணீர் வடிந்து நிலைமை சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும். இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையாக அரசு அளித்துள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}