- மஞ்சுளா தேவி
திருநெல்வேலி: நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் வெள்ள பாதிப்பு தொடர்வதால், இரு மாவட்டங்களிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு ஏரிகள் உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் மளமளவென கிராமம் நகரம் என ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஏற்கனவே வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்திருப்பதால், தண்ணீர் வடிந்து நிலைமை சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும். இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையாக அரசு அளித்துள்ளது.
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}