மதுரை: விஜய் நடித்த கோட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி நாளை வெளிவர உள்ள கோட் படத்தின் பீவர் தான். தி கோட் எப்படி இருக்கும், அதில் விஜய்யின் ரோல் என்னவாக இருக்கும், சண்டை படமா? குடும்ப படமா? விஜயகாந்த் ஏஐ தொழிநுட்பம் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பல கேள்விகளை சுமந்து கொண்டு விஜய் ரசிகர்கள் வலம் வருவது நாம் அனைவரும் அறிந்தே. இந்நிலையில், தி கோட் படத்தின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு வேறு வெளியிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.
.jpg)
இது ஒருபுறம் இருக்க இந்த படம் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி உள்ளது. படம் வெளியாவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேனியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவராக இருக்கக் கூடிய லெப்ட் பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிளக்ஸ், பேனர் வைக்க காவல்துறை அனுமதி தேவையில்லை. மனு தாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை.. முன்னாள் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்!
திமுக.,வில் ஓபிஎஸ்...தென் மாவட்டங்களில் பலத்தை இழக்கிறதா அதிமுக?
நிச்சயம் திமுக தோற்கும்.. உறுதி செய்து விட்டார் ஓபிஎஸ்.. டாக்டர் தமிழிசை பலே டிவீட்!
சட்டமன்றத் தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு!
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்... ஓபிஎஸ் வரவு நல்வரவாகட்டும்: முதல்வர் முக ஸ்டாலின் பதிவு!
நடிகையுடன் விஜய்க்குத் தொடர்பு.. விவாகத்து தர வேண்டும்.. மனைவி சங்கீதா பரபரப்பு வழக்கு
தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்!
திருத்தணி பேருந்து நிலையத்துக்கு ம.பொ.சி பெயரை நீடிக்க வேண்டும்.. சீமான் கோரிக்கை
மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}