மகா சிவராத்திரியை முன்னிட்டு.. திருப்புவனம் கால்நடை சந்தையில்.. களைகட்டிய ஆட்டு விற்பனை!

Feb 18, 2025,11:07 AM IST

சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு கோழி விற்பனை களைகட்டி உள்ளது. மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை புகழ்பெற்றதாகும். இங்கு  வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கால்நடை சந்தை  நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் ஆடு கோழிகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய் மற்றும் கோழிகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். 


இங்கு வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து ஆடு கோழிகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் திருப்புவனம் கால்நடைச் சந்தை களைகட்டும். அப்போது அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடைகள் விற்பனைகள் ஜோராக நடைபெற்று வரும்.




அந்த வகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ஆடுகள் கோழிகளை வாங்க கேரளா, தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்  திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே அதிக மக்கள் வாங்க வந்ததால் ஆடு கோழி விற்பனை களைகட்டியது. 


சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வாரம் 7000 முதல் 8000 வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று அதிக மக்கள் ஆடும் கோழிகளை வாங்க வந்ததால் 10 கிலோ எடை கொண்ட ஆட்டு விலை உயர்ந்து 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.20 கிலோ எடை கொண்ட கிடா ரூபாய் 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.


அதேபோல் இரண்டு ஜோடி வான்கோழி ரூபாய் 1300க்கும், ஒரு கிலோ சேவல் ரூபாய் 400க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

அதிகம் பார்க்கும் செய்திகள்