சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு கோழி விற்பனை களைகட்டி உள்ளது. மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை புகழ்பெற்றதாகும். இங்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் ஆடு கோழிகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய் மற்றும் கோழிகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து ஆடு கோழிகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் திருப்புவனம் கால்நடைச் சந்தை களைகட்டும். அப்போது அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடைகள் விற்பனைகள் ஜோராக நடைபெற்று வரும்.
அந்த வகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ஆடுகள் கோழிகளை வாங்க கேரளா, தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே அதிக மக்கள் வாங்க வந்ததால் ஆடு கோழி விற்பனை களைகட்டியது.
சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வாரம் 7000 முதல் 8000 வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று அதிக மக்கள் ஆடும் கோழிகளை வாங்க வந்ததால் 10 கிலோ எடை கொண்ட ஆட்டு விலை உயர்ந்து 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.20 கிலோ எடை கொண்ட கிடா ரூபாய் 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் இரண்டு ஜோடி வான்கோழி ரூபாய் 1300க்கும், ஒரு கிலோ சேவல் ரூபாய் 400க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}