கோவா: கோபி மஞ்சூரியன்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே நாவில் எச்சில் ஊறும். அப்படி ஒரு சூப்பரான மொறுமொறுப்பான உணவு அது.. ஆனால் ஒரு மாநிலத்தில் இந்த சூப்பர் உணவுக்குத் தடை விதிச்சிருக்காங்க மக்களே!
சைவப்பிரியர்களின் ஏகோபித்த உணவு என்றால் அது தாங்க நம்ம கோபி மஞ்சூரியன். இதை பார்த்தாலே உச்சு கொட்ட வைக்கும் தன்மை உடையது. நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் என்று கிடையாது. இந்த கோபி மஞ்சூரியனுக்கும் என்று தனி ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
சிறந்த உணவுகளில் இந்தோ-சைனீஸ் கலப்பு உணவான கோபிக்கு முக்கிய இடம் உண்டு. சீன வம்சாவளியான இந்தியாவை சேர்ந்த சமையல் கலைஞர் நெல்சன் வாங் என்பவர் 1970ல் இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த புதுமையான உணவை கண்டுபிடித்துள்ளார்.

உணவு ஆர்வலர்களின் விருப்ப உணவாக இருக்கும் இந்த கோபிமஞ்சூரியன் "டேஸ்ட் அட்லஸ்" எனும் ஆன்லைன் உணவு இதழ் பட்டியலிட்ட சைவ உணவுகளின் சிறந்த உணவு என்ற முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்படி பட்ட உணவிற்கு ஒரு நகரம் தடை விதித்துள்ளது. அது எந்த நகரம் தெரியுமா? அது நம்ம கோவா தாங்க. கோவா மாநிலத்தை சேர்ந்த மாபுசா நகரம் தாங்க கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது. எதற்கு இந்த தடை அது தெரியுமா மக்களே.. கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான விசயங்களுக்காக தான் மாபுசா நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இங்க மட்டும் இல்லங்க இந்த தடை.. கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீ தாமோதர் கோவிலில் வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது, கோவா மாநிலத்தின் மர்முகோவா முனிசிபல் கவுன்சிலுக்கு கோபி மஞ்சூரியன் விற்கும் ஸ்டால்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}