தை மாதம் கல்யாணம் வச்சிருக்கீங்களா?.. கவலை வேண்டாம்.. நகை விலை தொடர்ந்து குறைஞ்சிட்டே இருக்கு!

Feb 08, 2024,12:41 PM IST

சென்னை: தை மாதத்தில்  கல்யாணம் வைத்திருக்கும் விசேஷ வீட்டார்களா நீங்கள்.. கவலை வேண்டாம். இன்றும் நகை விலை குறைவு தான். இன்று மட்டும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.


கடந்த 3ம் தேதியில் இருந்து தொடர்ந்து நகை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து இருந்தது. அது இன்று மீண்டும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு ...  என்னய்யா ஆச்சிரயமா இருக்கே. தை மாதத்தில் நகை விலை குறைவாக இருக்கிறதே என்று பலரும் வியக்கும் வண்ணம் உள்ளது. 


தை மாதத்தில் முகூர்த்தம் நிறைய இருப்பதால் விசேஷ வீட்டாருக்கு நகை விலை குறைவு என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தை மாதம் என்றால் நகை விலை உயரத்தான் செய்யும் என்பார். அப்படித்தான்  அதன் விலையும் ஏற்றம் காணும்.  ஆனால் இந்த தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இன்றைய தங்கம் விலை நிலவரம்




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6372 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,976 ஆக உள்ளது.


இன்றைய வெள்ளி விலை நிலவரம்


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி  நேற்றைய விலையே நீடிக்கிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 76 ஆக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 608 உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 760 ஆக இருக்கிறது.


நகையில் ஏன் முதலீடு அதிகம்


நாட்டில் பண வீக்கத்திற்கு முக்கிய காரணமாக நகை விலை கருதப்படுகிறது. நகையில் இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தியும் முதலீடு செய்தும் வருகின்றனர். தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதி வருகின்றனர். இதனால் நகை வாங்கும்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனலாம்.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலையில் இறக்கம் காண்பதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்