சென்னை: தங்கம், வெள்ளி சந்தையில் விலை ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
பொதுவாக அக்டோபர் மாதம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை நிலையற்ற நிலையிலேயே உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த தங்கம் இன்று ரூ. 360 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தால் அதிகமாக உயர்கிறது. விலை குறைந்தால் அதிகமாகவே குறைகிறது.

தங்கத்தின் விலை குறைவைக் காட்டிலும் உயர்வு அதிகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது எனலாம். இதனால் ஏதாவது நகை வாங்கலாமே என்று நினைப்போர் அயர்ச்சி அடையும் நிலையே உள்ளது.
தங்கம் விலை இப்படி இருக்கும் காரணத்தினால் தங்கம் வாங்க நினைக்கும் மக்கள் விரைந்து வாங்கி தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். விட்டால் அடுத்தடுத்து சீசன் வருவதால் விலை மேலும் உயரத்தான் செய்யும்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5555 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44440 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6060 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 49 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}