சென்னை: தங்கம், வெள்ளி சந்தையில் விலை ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
பொதுவாக அக்டோபர் மாதம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை நிலையற்ற நிலையிலேயே உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த தங்கம் இன்று ரூ. 360 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தால் அதிகமாக உயர்கிறது. விலை குறைந்தால் அதிகமாகவே குறைகிறது.
தங்கத்தின் விலை குறைவைக் காட்டிலும் உயர்வு அதிகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது எனலாம். இதனால் ஏதாவது நகை வாங்கலாமே என்று நினைப்போர் அயர்ச்சி அடையும் நிலையே உள்ளது.
தங்கம் விலை இப்படி இருக்கும் காரணத்தினால் தங்கம் வாங்க நினைக்கும் மக்கள் விரைந்து வாங்கி தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். விட்டால் அடுத்தடுத்து சீசன் வருவதால் விலை மேலும் உயரத்தான் செய்யும்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5555 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44440 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6060 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 49 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}