சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் என்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ம் தேதியில் இருந்து உயர்ந்து வந்த தங்கம் நேற்று வரை உயர்ந்தே காணப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து இருந்தனர். குறிப்பாக, வைகாசியில் விஷேசங்கள் வைத்திருந்தவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டனர். இந்நிலையில், இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விலை குறைவு சிறுது நாட்களுக்கு நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,775 ரூபாயாக உள்ளது. நேற்று கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,200 ரூபாயாக இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,730 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.360 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,736 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.101க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,200 இருந்த விலை இன்று ரூ.1,01,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.1.200 குறைந்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}