சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் என்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ம் தேதியில் இருந்து உயர்ந்து வந்த தங்கம் நேற்று வரை உயர்ந்தே காணப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து இருந்தனர். குறிப்பாக, வைகாசியில் விஷேசங்கள் வைத்திருந்தவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டனர். இந்நிலையில், இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விலை குறைவு சிறுது நாட்களுக்கு நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,775 ரூபாயாக உள்ளது. நேற்று கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,200 ரூபாயாக இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,730 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.360 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,736 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.101க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,200 இருந்த விலை இன்று ரூ.1,01,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.1.200 குறைந்துள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}