சென்னை: நேற்று குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. தங்கம் மட்டும் இல்லை வெள்ளியும் உயர்ந்தே உள்ளது.
கடந்த 2 நாட்களாக சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம், அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜூன் மாதம் தொடக்கம் முதலே அதிக ஏற்ற இற்றக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதுவும் கிராமிற்கு ரூ.55 உயர்ந்து, சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறி வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 55 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.440 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,315 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,520 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 ஆக உள்ளது.கடந்த 2 நட்களாக ரூ.240 குறைந்திருந்த நிலையில், இன்று ரூ.440 அதிகரித்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 0.60 காசுகள் உயர்ந்து ரூ.95.60 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.95.000 விற்கப்பட்டது இன்று ரூ.95.600 விற்கப்படுகிறது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}