சென்னை: நேற்று குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. தங்கம் மட்டும் இல்லை வெள்ளியும் உயர்ந்தே உள்ளது.
கடந்த 2 நாட்களாக சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம், அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜூன் மாதம் தொடக்கம் முதலே அதிக ஏற்ற இற்றக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதுவும் கிராமிற்கு ரூ.55 உயர்ந்து, சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறி வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 55 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.440 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,315 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,520 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 ஆக உள்ளது.கடந்த 2 நட்களாக ரூ.240 குறைந்திருந்த நிலையில், இன்று ரூ.440 அதிகரித்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 0.60 காசுகள் உயர்ந்து ரூ.95.60 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.95.000 விற்கப்பட்டது இன்று ரூ.95.600 விற்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}