சென்னை: இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. இன்று கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5380க்கு விற்பனையாகிறது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சுப காரியங்கள் ஏதும் நடக்காமல் உள்ளது. புரட்டாசி மாதமும், மகாளய பட்ச காலமும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு திருமண முகூர்த்தம் ஆரம்பமாகி விடும்.

ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்கள் அமாவாசையில் தங்கம் வாங்கலாம், புரட்டாசி மாதத்தில் விலை குறையும் வாங்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் முடிவடைவதற்கு முன்பே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5380 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5869 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}