சென்னை: இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. இன்று கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5380க்கு விற்பனையாகிறது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சுப காரியங்கள் ஏதும் நடக்காமல் உள்ளது. புரட்டாசி மாதமும், மகாளய பட்ச காலமும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு திருமண முகூர்த்தம் ஆரம்பமாகி விடும்.
ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்கள் அமாவாசையில் தங்கம் வாங்கலாம், புரட்டாசி மாதத்தில் விலை குறையும் வாங்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் முடிவடைவதற்கு முன்பே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5380 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5869 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}