சென்னை: இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. இன்று கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5380க்கு விற்பனையாகிறது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சுப காரியங்கள் ஏதும் நடக்காமல் உள்ளது. புரட்டாசி மாதமும், மகாளய பட்ச காலமும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு திருமண முகூர்த்தம் ஆரம்பமாகி விடும்.
ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்கள் அமாவாசையில் தங்கம் வாங்கலாம், புரட்டாசி மாதத்தில் விலை குறையும் வாங்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் முடிவடைவதற்கு முன்பே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5380 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5869 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}