சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.96.20க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதம் புதிய உச்சம் தொட்ட தங்கம், ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் எல்லாம் தமிழகத்தில் உள்ள மக்கள் தான் நகை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு வாங்கி வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் இந்தியர்கள் மட்டும் இன்றி உலகளவில் உள்ள மக்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகின்றனர். இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது நகையின் விலை தான்.
நாளுக்கு நாள் நகை விலை அதிகம் ஏற்றம் கண்டு வருவதும், நாட்டில் பொருளாதாரம் சீர் கெட்டு இருப்பதும் நகையில் மக்கள் முதலீடு செய்ய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,645 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.120 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,160 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,249 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,992 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று சரிந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.20 காசுகள் உயர்ந்து ரூ.95 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 760 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.96,200 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.95,000 விற்கப்படுகிறது.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}