காங்டாக் : அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மகப்பேறு கால விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேம் சிங், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 12 மாதம் மகப்பேறு விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும். பலன்களின் அடிப்படையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். இது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு பலன் சட்டம் 1961 ன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிக குறைந்த அளவாக 6.32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் சிக்கிமில் முதல் முறையாக பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}