காங்டாக் : அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மகப்பேறு கால விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேம் சிங், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 12 மாதம் மகப்பேறு விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும். பலன்களின் அடிப்படையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். இது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு பலன் சட்டம் 1961 ன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிக குறைந்த அளவாக 6.32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் சிக்கிமில் முதல் முறையாக பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
{{comments.comment}}