காங்டாக் : அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மகப்பேறு கால விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேம் சிங், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 12 மாதம் மகப்பேறு விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும். பலன்களின் அடிப்படையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். இது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு பலன் சட்டம் 1961 ன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிக குறைந்த அளவாக 6.32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் சிக்கிமில் முதல் முறையாக பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}