காங்டாக் : அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மகப்பேறு கால விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேம் சிங், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 12 மாதம் மகப்பேறு விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும். பலன்களின் அடிப்படையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். இது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு பலன் சட்டம் 1961 ன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிக குறைந்த அளவாக 6.32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் சிக்கிமில் முதல் முறையாக பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}