சென்னை : டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவின் இன்ஸ்டா போஸ்டை பார்த்து விட்டு அவருக்கு என்னாச்சு என்பது தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது.
டிக்டாக் ஆப் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி.முத்து. பிறகு யூட்யூப்பிலும் கலகலப்பான வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானார். நெல்லை தமிழில் இவர் தன்னை விமர்சிப்பவர்களை வசைப்படும் டயலாக்கும், ஸ்டைலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது.
டிக்டாக்கில் வீடியோ போட்டதை விட, மற்றவர்களுடன் இவர் போட்ட சண்டை தான் இவர் பிரபலமாக்கியது. டிக்டாக் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக, வீட்டிற்குள் முதல் ஆளாக சென்று ஜி.பி.முத்து, இரண்டாவது வாரத்திலேயே தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், தயவு செய்து தன்னை வெளியே அனுப்பி வைக்கும்படியும் பிக்பாசிடம் கெஞ்ச துவங்கி விட்டார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பிக்பாசே இவரை வெளியே அனுப்பி வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
அஜித் நடித்த வலிமை படத்தில் சில காட்சிகள், சன்னி லியோனுடன் ஒரு படம் என பட வாய்ப்புக்களும் இவரை தேடி வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலவும், தனக்கு டெஸ்ட்கள் எடுக்கப்படுவது போலவும் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார் ஜி.பி.முத்து. இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அண்ணே என்னாச்சு என பதறிப் போய் கேட்டு வருகின்றனர். அவர் விரைவில் குணமடையவும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவரது உடல்நிலைக்கு என்ன பிரச்சனை, அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவருக்கு என்னாச்சு என்பது பற்றி சோஷில் மீடியாவில் பலரும் ஆர்வமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் சாதாரண காய்ச்சல் காரணமாகத்தான் இவரை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்இவரது போட்டோவுக்கு வந்த கமெண்ட்டுகளைப் பார்த்தால் செம காமெடியாக இருக்கிறது.
இதையெல்லாம் பார்த்து உடம்பு தேறி வந்த பின்னர் "செத்த பயலுவளா.. நாறப் பயலுவளா.. பேதில போவான்" என்று முத்து வெளுக்கப் போவதை நினைத்துத்தான் சிரிப்பாக வருகிறது.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}