திருப்பூர்: திருப்பூரில் பூப்புனித நன்னீராட்டு விழாவில் தங்கை மகளுக்கு 2 குதிரைகளுடன் 150 தட்டுகள் சீர் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தியுள்ளனர்.
தமிழர்களின் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறை தாய்மாமன். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். இன்று நேற்று இந்த சீர்வரிசை கொண்டு வருவது நடக்கவில்லை.. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது இது. குழந்தைகளை தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பூப்பு சடங்கு, பட்டம் கட்டுதல் போன்ற காலங்களில் தாய்மாமன் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தாய்மாமன் உறவிற்காக எவ்வளவோ பிரச்சனைகள் தமிழக மண்ணில் நடந்துள்ளன. தொன்று தொட்டு பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் சீர் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்று கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டில் பூப்பு நன்னீராட்டு விழாவும் முக்கிய இடம் பெறுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அது முக்கியமானதாகவும் நம்ம ஊர் பாரம்பரியம் வைத்திருக்கிறது.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டி கட்டி அதில் சீர் கொண்டு வந்தார்கள். பிறகு காலப் போக்கில் எல்லாம் மாறிப் போய் விட்டன. ஆனால் சமீப காலமாக இந்த சீர் வரிசை தருவதை மீண்டும் கிராண்டாக செய்ய ஆரம்பித்துள்ளனர்.
லாரியில் சீர்வரிசை கொண்டு வருதல், மாட்டு வண்டியில் சீர்வரிசைக் கொண்டு வருதல் என ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு எல்லாம் நடக்கையில், திருப்பூர் காங்கேயத்தில் என்ன நடந்தது தெரியுமா? ஆமாங்க, அங்கு தாய்மாமன்கள் 2 குதிரைகளுடன் 50 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த எஸ். பொன்ஹர்ஷிகா என்ற பெண்ணின் தாய்மாமன்கள் குதிரையில் ஏரி ஊர்வலமாக வந்து 150 தட்டுகள் மற்றும் இரண்டு குதிரைகளையும் சீர் வரிசையாக கொடுத்து அசத்தியுள்ளனர். மேளதாள முழக்கத்துடன் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம், சாக்லெட், பொரி, அவுல் உள்ளிட்ட பொருட்களை 150 தட்டுகளில் வைத்து ஊர்வலமாக வந்து அசத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}