தாய்மாமன்  சீர் சுமந்து வாராண்டி.. ஆத்தாடி எத்தனை தட்டு.. 2 குதிரை வேறயா.. அசத்திட்டீங்களே மாம்ஸ்!

Feb 02, 2024,10:42 AM IST

திருப்பூர்: திருப்பூரில் பூப்புனித நன்னீராட்டு விழாவில் தங்கை மகளுக்கு 2 குதிரைகளுடன் 150 தட்டுகள் சீர் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தியுள்ளனர்.


தமிழர்களின் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறை தாய்மாமன். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். இன்று நேற்று இந்த  சீர்வரிசை கொண்டு வருவது நடக்கவில்லை.. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது இது. குழந்தைகளை தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பூப்பு சடங்கு, பட்டம் கட்டுதல் போன்ற காலங்களில் தாய்மாமன் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 


தாய்மாமன் உறவிற்காக எவ்வளவோ பிரச்சனைகள் தமிழக மண்ணில் நடந்துள்ளன. தொன்று தொட்டு பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் சீர் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்று கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டில் பூப்பு நன்னீராட்டு விழாவும் முக்கிய இடம் பெறுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அது முக்கியமானதாகவும் நம்ம ஊர் பாரம்பரியம் வைத்திருக்கிறது.




அந்தக் காலத்தில் மாட்டு வண்டி கட்டி அதில் சீர் கொண்டு வந்தார்கள். பிறகு காலப் போக்கில் எல்லாம் மாறிப் போய் விட்டன. ஆனால் சமீப காலமாக இந்த சீர் வரிசை தருவதை மீண்டும் கிராண்டாக செய்ய ஆரம்பித்துள்ளனர்.


லாரியில் சீர்வரிசை கொண்டு வருதல், மாட்டு வண்டியில் சீர்வரிசைக் கொண்டு வருதல் என ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு எல்லாம் நடக்கையில், திருப்பூர் காங்கேயத்தில் என்ன நடந்தது தெரியுமா? ஆமாங்க, அங்கு தாய்மாமன்கள்  2 குதிரைகளுடன் 50  தட்டுகளில் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த எஸ். பொன்ஹர்ஷிகா என்ற பெண்ணின் தாய்மாமன்கள் குதிரையில் ஏரி ஊர்வலமாக வந்து 150 தட்டுகள் மற்றும் இரண்டு குதிரைகளையும் சீர் வரிசையாக கொடுத்து அசத்தியுள்ளனர். மேளதாள முழக்கத்துடன் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம், சாக்லெட், பொரி, அவுல் உள்ளிட்ட பொருட்களை 150 தட்டுகளில் வைத்து ஊர்வலமாக வந்து அசத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்