சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையை குறைந்துள்ளது ஆவின் நிறுவனம்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை இன்று குறைந்துள்ளது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.
ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கும், ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275க்கும், ரூ.690க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் நெய் ரூ.650க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45க்கும், 100 மில்லி லிட்டர் நெய் ரூ.80க்கும், 200 மில்லி லிட்டர் நெய் ரூ.150க்கும், 500 மில்லி லிட்டர் நெய் 354க்கும், 5 லிட்டர் நெய் ரூ.3,250க்கும், 15 கிலோ நெய் ரூ.10,725க்கும் விலை நிர்ணயம் செய்ய்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு ஆவின் பால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!
விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்
ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!
ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி
{{comments.comment}}