சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையை குறைந்துள்ளது ஆவின் நிறுவனம்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை இன்று குறைந்துள்ளது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.

ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கும், ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275க்கும், ரூ.690க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் நெய் ரூ.650க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45க்கும், 100 மில்லி லிட்டர் நெய் ரூ.80க்கும், 200 மில்லி லிட்டர் நெய் ரூ.150க்கும், 500 மில்லி லிட்டர் நெய் 354க்கும், 5 லிட்டர் நெய் ரூ.3,250க்கும், 15 கிலோ நெய் ரூ.10,725க்கும் விலை நிர்ணயம் செய்ய்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு ஆவின் பால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}