ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்

Sep 25, 2025,04:05 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் குச்சி குச்சி ராக்கமா என்று தொடங்கும் பாடலை குழந்தை குரலில் பாடியவர். இவர் 2006ம் ஆண்டு வெளியான வெயில் திரடப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் காரணமாக பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தார்.


இந்த நிலையில், தனது பள்ளி கால காதலியான சைந்தவியை தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர். அத்துடன் இருவரும் ஓரே காரில் வந்து சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.




இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்