ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்

Sep 25, 2025,04:05 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் குச்சி குச்சி ராக்கமா என்று தொடங்கும் பாடலை குழந்தை குரலில் பாடியவர். இவர் 2006ம் ஆண்டு வெளியான வெயில் திரடப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் காரணமாக பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தார்.


இந்த நிலையில், தனது பள்ளி கால காதலியான சைந்தவியை தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர். அத்துடன் இருவரும் ஓரே காரில் வந்து சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.




இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்