சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா

Dec 08, 2025,02:55 PM IST

- சுமதி சிவக்குமார்


சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தமிழ் சங்கமும் அறம் செய விரும்பு கல்வி மற்றும் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாபெரும் ஹைக்கூ திருவிழா நேற்று நைனார்பாளையம் ரோட்டில் உள்ள அரிசி ஆலை அரங்கத்தில் நடைபெற்றது. 


இதில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்திறப்பு விழா, இனிக்கும் காற்று என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருது வழங்கும் விழா என மாபெரும் ஹைக்கூ திருவிழாவாக கொண்டாடினர்.


இவ்விழாவில் கள்ளக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. தர்மராஜா தலைமை தாங்கினார்.




கவிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையும் துவக்க உரையை தமிழ்த்துறைத் தலைவர் ம. மோட்ச ஆனந்தன் நோக்கவுரையை சின்னசேலம் தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் கவிதை தம்பியும்  தமிழ்ச்சங்க காப்பாளர்கள் அருணா தொல்காப்பியன் , மு. அசோகன், மு. செந்தில்குமார், செயலாளர் இல. அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை உரையும் நிகழ்த்தினர். 


பண்டித ஜவஹர்லால் நேரு படத்தை மரு. பொன். க. இரத்தின வேலு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதன்பின் இனிக்கும் காற்று என்ற ஹைக்கூ நூலை அதன் ஆசிரியர் மு. முருகன் வெளியிட்டார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் வாசுதேவன் இநநூலை திறனாய்வு செய்தார்.


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்களுக்கு கவிச்சுடர் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  கவிஞர்கள் முகம் பதித்த விருது ஷீல்ட், கவிஞர்கள் முகம் பதித்த விருது சான்றிதழ், தலைப்பாகை, முத்துமாலை, பொற்கிழி, பொன்னாடை என இவ்விருதில் கவிஞர்களுக்கு அளிக்கப்பட்டது. 


வாழ்த்துரை கவிஞர் கோபால கிருஷ்ண, இரா. வெற்றி வேல் , பெ. கண்ணன் வழங்கினர்.  விழாவில் கவிஞர்கள் ஆசிரியர்கள் மற்றும் தமிழார்வர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ்ச்சங்க பொருளாளர் நடராஜன் நன்றி கூறி விழா இனிதே நிறைவு பெற்றது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்