சென்னை: உள்புற தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யும் என்று ஆறுதல் செய்தியைச் சொல்லியிருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது ஒரு பேட் நியூஸைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வடக்கு உட்புற மாவட்டங்களில் வெப்ப நிலை உச்சத்தைத் தொடப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். இதனால் மக்களிடையே அயர்ச்சி உருவாகியுள்ளது.
இந்த முறை கோடைகாலம் மிகக் கொடுமையாக இருக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. கடுமையான ஹீட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அனல் பறக்க வெயில் அடித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மே 4ம் தேதி அக்னிநட்சத்திர வெயிலும் தொடங்கவுள்ளது. 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பேட் நியூஸ் என்று கூறி வெப்ப அலை வீச்சு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் கூறுகையில், மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு உட்புற மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் பெல்ட் பகுதிகளில் வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மே 5ம் தேதி முதல் உட்புற தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் கூறியுள்ளார். வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று கூறப்பட்டிருப்பதால் கடும் வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து தப்ப முடியும் என்பதால் பயப்படாமல் இருக்கவும்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}