சென்னை: உள்புற தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யும் என்று ஆறுதல் செய்தியைச் சொல்லியிருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது ஒரு பேட் நியூஸைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வடக்கு உட்புற மாவட்டங்களில் வெப்ப நிலை உச்சத்தைத் தொடப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். இதனால் மக்களிடையே அயர்ச்சி உருவாகியுள்ளது.
இந்த முறை கோடைகாலம் மிகக் கொடுமையாக இருக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. கடுமையான ஹீட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அனல் பறக்க வெயில் அடித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மே 4ம் தேதி அக்னிநட்சத்திர வெயிலும் தொடங்கவுள்ளது. 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பேட் நியூஸ் என்று கூறி வெப்ப அலை வீச்சு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் கூறுகையில், மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு உட்புற மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் பெல்ட் பகுதிகளில் வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மே 5ம் தேதி முதல் உட்புற தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் கூறியுள்ளார். வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று கூறப்பட்டிருப்பதால் கடும் வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து தப்ப முடியும் என்பதால் பயப்படாமல் இருக்கவும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}