சென்னை: உள்புற தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யும் என்று ஆறுதல் செய்தியைச் சொல்லியிருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது ஒரு பேட் நியூஸைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வடக்கு உட்புற மாவட்டங்களில் வெப்ப நிலை உச்சத்தைத் தொடப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். இதனால் மக்களிடையே அயர்ச்சி உருவாகியுள்ளது.
இந்த முறை கோடைகாலம் மிகக் கொடுமையாக இருக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. கடுமையான ஹீட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அனல் பறக்க வெயில் அடித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மே 4ம் தேதி அக்னிநட்சத்திர வெயிலும் தொடங்கவுள்ளது. 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பேட் நியூஸ் என்று கூறி வெப்ப அலை வீச்சு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் கூறுகையில், மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு உட்புற மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் பெல்ட் பகுதிகளில் வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மே 5ம் தேதி முதல் உட்புற தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் கூறியுள்ளார். வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று கூறப்பட்டிருப்பதால் கடும் வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து தப்ப முடியும் என்பதால் பயப்படாமல் இருக்கவும்.
Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}