மதுரையில் வெளுத்து வாங்கிய கன மழை.. வைகையில் வெள்ளப் பெருக்கு.. போக்குவரத்து பாதிப்பு

Oct 14, 2024,10:24 PM IST

மதுரை : தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றிலும் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடி வந்த நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கீழ் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.




இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த கோரிப்பாளையம் மேம்பால பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைகள் களைகட்டி உள்ள நேரத்தில் மதுரையில் கனமழை பெய்து வருவதால் மதுரை மக்கள் கவலை அடைந்துள்ளனர். பல ஊர்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.


கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அங்கு சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதே இப்படி என்றால் இனி போகப் போக எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்