மதுரை : தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றிலும் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடி வந்த நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கீழ் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.
இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த கோரிப்பாளையம் மேம்பால பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைகள் களைகட்டி உள்ள நேரத்தில் மதுரையில் கனமழை பெய்து வருவதால் மதுரை மக்கள் கவலை அடைந்துள்ளனர். பல ஊர்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அங்கு சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதே இப்படி என்றால் இனி போகப் போக எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}