மதுரை : தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றிலும் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடி வந்த நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கீழ் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.
இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த கோரிப்பாளையம் மேம்பால பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைகள் களைகட்டி உள்ள நேரத்தில் மதுரையில் கனமழை பெய்து வருவதால் மதுரை மக்கள் கவலை அடைந்துள்ளனர். பல ஊர்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அங்கு சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதே இப்படி என்றால் இனி போகப் போக எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}