மதுரை : தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றிலும் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடி வந்த நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கீழ் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.

இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த கோரிப்பாளையம் மேம்பால பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைகள் களைகட்டி உள்ள நேரத்தில் மதுரையில் கனமழை பெய்து வருவதால் மதுரை மக்கள் கவலை அடைந்துள்ளனர். பல ஊர்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அங்கு சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதே இப்படி என்றால் இனி போகப் போக எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}